India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமாரிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல முன்னேற்பாடாக EVM வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அதனை வைப்பதற்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி கீதா, தனி வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அணுகலாம் என இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கௌதம் சிகாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷரவன்குமார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லோக்சபா தொகுதியில் உள்ள பகுதிகளில் தேர்தலை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 15 ஆவது செயற்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள வெற்றி திருமண மஹாலில் நடைபெற்றது. முதல் மாநிலத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம புற, நகர் புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அது தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக அச்சடிக்கப்பட்ட செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.