India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாலை 3 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் போன்று தற்போது தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் போன்று தற்போது தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயளாலர் அய்யப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், மருத்துவர் பொன்னரசு மற்றும் தியாகதுருகம் மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி தலைவர்களின் திருவுருவச்சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க வெள்ளை துணிகளை கொண்டு மூடும் வேலை நடைபெற்று வந்தது இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கும் துணிகளால் மூடப்பட்டது.பின்னர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் துணிகளை எடுக்க உத்தரவிட்டார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள வடகரை தாழனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது சேலம் திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுரு, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் தனது வேட்பு மனுவினை இன்று தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் மோகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் முன்னாள் அமைச்சர் பா. மோகன் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், தேர்தல் பொறுப்பாளர் பிரபு கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.