Kallakurichi

News April 8, 2024

ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் தேர்தலை கையாளும் முறையை பற்றி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.

News April 7, 2024

ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் தேர்தலை கையாளும் முறையை பற்றி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.

News April 7, 2024

அரிசி உரிமையாளர்கள் சங்கத்துடன் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நெல் அரிசி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆதரவு கேட்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News April 7, 2024

கள்ளக்குறிச்சி: வயிற்று வலியால் பெண் தற்கொலை

image

திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், மனைவி சுமதி(45). இவருக்கு, கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்

News April 7, 2024

கள்ளக்குறிச்சி: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

கள்ளக்குறிச்சி: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 101 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 4 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் உரிமம் பெற்றவர்களின் 152 துப்பாக்கிகளை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. உரிமம் பெற்றவர்களின் துப்பாக்கிகளை கள்ளக்குறிச்சி உட்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் 82 துப்பாக்கிகள், திருக்கோவிலூரில் 41, உளுந்தூர்பேட்டையில் 29 ஆக மொத்தம் 152 துப்பாக்கிகளை போலீஸார் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

News April 5, 2024

அடிப்படை வசதி இல்லை என்று கேட்டதற்கு அடி உதை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஏந்தல் கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற போது அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை என கேள்வி கேட்ட இளைஞரை திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முருகேசன் மற்றும் மகன் ஆகியோர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News April 5, 2024

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி ரூ.18 லட்சம் இழந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று இரவு சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

News April 5, 2024

கள்ளக்குறிச்சி: லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வடசேமைபாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(40),விவசாயி. இவர் நேற்று (ஏப்.,4) தனது இரு சக்கர வாகனத்தில் சேம பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!