India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் விஜயா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்றதாக ஏற்கெனவே கோவிந்தராஜ் அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் கைதாகியிருந்த நிலையில் தற்போது விஜயா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாரம் குடித்து உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோரில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாத் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரஜத் சதுர்வேதி புதிய எஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயத்தால் பத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தை பணியிட மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட செய்துள்ள முதல்வர், புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாத் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கவலையளிப்பதாகவும், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனங்களை இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன்.21 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என்றார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாளை பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம் என இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.