India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழாக்களை நடுத்திட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சி.இ.ஓ கார்த்திகா சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆகஸ்ட் 6-ம் தேதி திருக்கோவிலூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம்,கச்சிராயப்பாளையம் V.S.A மஹால்,மாடூர் நித்தின் மஹால்,விருகாவூர் இந்திரா ரங்கசாமி மண்டபம்,எஸ்.வி.பாளையம் பஜனை கோயில் தெரு,காட்டு எடையார் சிவன் கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் இம்முகாமில் கலந்து கொண்ட விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆக.05 இன்றைய விலை நிலவர பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர். இதில், எள் அதிகபட்சமாக ரூ.8,019க்கும், மக்காச்சோளம் ரூ.2,541க்கும் விற்பனையானது. மேலும், உளுந்து அதிகபட்ச விலையாக ரூ.2,199க்கு விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை காணலாம்.
கள்ளக்குறிச்சி மக்களே பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு தருகிறது, Frontend Developer என்ற பதிவுக்கு கணினியில் முதுகலை பட்டம், அல்லது IT சம்மந்தமான படிப்பு ஏதும் படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு மாதம் 30,000-45,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
கள்ளக்குறிச்சியில் இன்று (ஆக.05) பல்வேறு இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், திருக்கோவிலூர், கல்வராயன்மலை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சியில் ஆகஸ்ட்-5 மகாலட்சுமி திருமண மண்டபத்திலும், சங்கராபுரம் நாகபிள்ளை திருமண மண்டபத்திலும், அதையூர் ஏ.எம்.எஸ் திருமண மண்டபத்திலும், கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆவி.கொளப்பாக்கம் செளபாக்யா திருமண மண்டபத்திலும், தொரடிப்பட்டு காமாட்சி அம்மன் கோயிலிலும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.