Kallakurichi

News September 2, 2024

கள்ளக்குறிச்சி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் உள்ள தனியார் மகாலில் இன்று கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு விதமான கருத்துக்களை வழங்கி சிறப்புரைற்றினார்

News September 1, 2024

இரவு நேர ரோந்து பணி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (01.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 1, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து ; மரணம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் இன்று சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் மீது இன்னோவா கார் மோதிய விபத்தில் தையல்நாயகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News September 1, 2024

கள்ளக்குறிச்சி மாணவன் முதலிடம்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான 10 வயதுக்கு உள்ளான மாணவர்களுக்கான சதுரங்க போட்டியில், நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சார்ந்த, ஜெகத் ஆதித்யா என்ற மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.

News September 1, 2024

கள்ளக்குறிச்சி அருகே தலைமை காவலர் சஸ்பெண்ட்

image

உளுந்தூர்பேட்டையில் வங்கி இன்சூரன்ஸ் ஊழியர் ரமணி கொலை செய்யப்பட்ட நிலையில், ரமணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த போது அவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக உதவி ஆய்வாளர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அப்போது உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவரை தற்காலிக பணி நீக்கம் இன்று விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 1, 2024

சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த திமுக செயற்குழு கூட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும், இதில் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 1, 2024

திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தற்காலிக பணிநீக்கம்

image

உளுந்தூர்பேட்டையில் கணவரால் கொலை செய்யப்பட்ட வங்கி ஊழியர் ரமணி என்பவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் நந்தகோபால் தகாத உறவில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது, திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் நந்தகோபால் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 1, 2024

வேளாங்கண்ணிக்குச் சென்ற பக்தர் மாரடைப்பால் மரணம்

image

குரோம்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன், தனது நண்பர்கள் 8 பேருடன் காரில் வேளாங்கண்ணி கோவில் கொடியேற்ற திருவிழாவிற்கு சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது, நேற்று ஆசனூர் பகுதியில் டீ குடித்து கொண்டிருக்கும்போது மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News September 1, 2024

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு

image

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2024

கள்ளக்குறிச்சியில் யானை வாகனத்தில் புறப்பட்ட உலகளந்த பெருமாள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஆவணி மாத மஹா ஜெயந்தி உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியான ஆறாவது நாளான இன்று இரவு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பட நிகழ்வு நடைபெற்றது. நான்கு மாடவீதி வழியாக நடைபெற்ற திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!