Kallakurichi

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 2/2

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 1/2

image

கள்ளக்குறிச்சி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17340344>>தொடர்ச்சி!<<>>

News August 8, 2025

வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

image

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

News August 8, 2025

கள்ளக்குறிச்சியில் வரலட்சுமி நோன்பிற்கு இதை செய்யுங்க

image

வரலட்சுமி நோன்பு, லட்சுமி தேவியின் அருளை வேண்டி சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் ஒரு புனிதமான விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஆக்.08) திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை விமர்சையாக இங்கு நடைபெறும். ஷேர் பண்ணுங்க!<<17338869>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின், 2025-26ஆம் ஆண்டிற்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க, ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு, விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: விபத்தில் சிக்கி 3 பேர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மஹால் பகுதியில் நேற்று கொய்யாக்காய் ஏற்றி சென்ற மகேந்திரா பிக்கப் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நாககுப்பத்தை சேர்ந்த தினேஷ், வெங்கடேஷ் ,சிவசக்தி மூவரும் திடீரென நிலைதடுமாறி விழுந்ததில் மகேந்திர பிக்கப் வாகனம் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News August 7, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு புல் நறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 5360 ரூபாய் மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிரசாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

கள்ளக்குறிச்சி: பித்ருக்கள் சாபம், கடன் தொல்லை நீங்க இங்க போங்க

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பாக 4வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் எனது ஐதீகமாக இருக்கிறது. ஷேர்

News August 7, 2025

கள்ளக்குறிச்சி: தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி….?

image

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார்&அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம்(04151-294600)புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News August 7, 2025

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் இன்றைய விலை

image

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஆகஸ்ட்-7) வெளியிடப்பட்ட விலை நிலவரப் பட்டியலின்படி, எள் அதிகபட்சமாக ரூ.8,680-க்கும், மக்காச்சோளம் ரூ.2,529-க்கும், மணிலா அதிகபட்சமாக ரூ.8,420-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

error: Content is protected !!