Kallakurichi

News September 8, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (08.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 8, 2024

சிசிடிவி கேமரா வைக்க நாளை உத்தரவு

image

கோமுகிஅணையில் விநாயகர் சிலை கரைக்க நாளை கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சின்ன சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலைகள் கோமுகி ஆற்றில் அந்த சிலைகள் கரைக்க உள்ளனர். இந்த இடத்தை மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி இன்று ஆய்வு செய்தார். அப்பொழுது அந்த பகுதியில் சிசிடிவி  கேமராக்கள் வைக்க உத்தரவிட்டார். உடன் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கார்த்தி உடன் இருந்தனர்

News September 8, 2024

விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்.10ஆம் தேதி முதல் தொடங்கி வரும் செப்.24ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2024

விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கி வரும் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2024

தம்பியை அரிவாளால் வெட்டிய 2 அண்ணன்கள் கைது

image

கரியாலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பண்ணியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், குமார், இளையாப்பிள்ளை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் அண்ணன் தம்பிகள். பாலகிருஷ்ணனை அவருடை சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து நேற்று இரவு தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதையடுத்து கரியலூர் போலீசார் இன்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

News September 7, 2024

திருக்கோவிலூர் உதவி மாவட்ட ஆட்சியர் நியமனம்

image

தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் உதவி மாவட்ட ஆட்சியராக ஆனந்த் குமார் சிங்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூர் கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை இனி இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2024

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் செப்டம்பர் 9 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாக்டர்.ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருக்கோவிலூர் கோட்டத்தில் வரும் செப்டம்பர் 12-ம் தேதியன்று அரசு கலைக்கல்லூரியிலும் செப்டம்பர் 23-ம் தேதி ஜவகர்லால் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News September 7, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

image

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு துறையின் வாயிலாக வழங்கப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு வலை பயன்பாடானது துவங்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, OTP பெற தொலைபேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News September 7, 2024

கல்வராயன் மலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியாலூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 1,082 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 15,880 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் , எம்.பி. மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

error: Content is protected !!