India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.சிபிஐ விசாரணை மேற்கொண்டால் காலதாமதம் ஆகும் எனவும் தமிழ்நாடு அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் புயல் மழையால் 410 வீடுகள் சேதமாகி உள்ளது. அவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை 2000 ரூபாய் சம்பந்தப்பட்ட துறை சார்பாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.70, கத்திரிக்காய் ரூ.60, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.40, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.50, பீர்க்கன் ரூ.70, முருங்கைக்காய் ரூ.100, முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.70, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமாக இருந்தது. வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கின.இதனால் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய்.2,000 வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டங்கள் கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கல்வராயன்மலையில் மழையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர், எழுத்தூர், ஈச்சங்காடு, கிழாத்துக்குழி, ஏட்றப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.17,000, உயிரிழந்த மாட்டுக்கு ரூ.37,500, 33% பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு ரூ.17,000, முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய விடு கட்டித்தரப்படும் என முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டி 03) திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் திருக்கோவிலூர் பகுதிகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.