Kallakurichi

News September 30, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இதில் பொதுமக்களிடமிருந்து 419 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 21 மனுக்கள் என மொத்தமாக 440 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2024

கள்ளச்சாராயம் காய்ச்சினால் ஓராண்டு சிறை தண்டனை

image

கல்வராயன்மலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து சட்ட விரோதமாக போதைப்பொருள்கள், கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராய ஊரல்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் ஈடுபடும் நபர்கள் ஓராண்டு தடுப்பு கவுல் சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

கள்ளக்குறிச்சியில் திருமாவளவன் முக்கிய அறிவிப்பு?

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதை ஒட்டி பந்தல் அமைக்கும் பணி,கொடிகள் கட்டும் பணிகள்,மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை மாநிலத் தலைவர் தொல் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்.

News September 30, 2024

கள்ளக்குறிச்சி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் அழிப்பு

image

கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு வனப்பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கரியாலூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அருவங்காடு வனப்பகுதியில் ரெய்டில் ஈடுபட்டனர்.அங்கு சாராய ஊறலை பார்த்த போலீசார் ஊறலை அழித்தனர்.இதில் அண்ணாமலை என்பவரை கைது செய்தனர்.இப்பகுதியில் சாராய உற்பத்தி என்பது தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 30, 2024

கள்ளக்குறிச்சியில் காய்கறி விலை அதிகரிப்பு

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து, இஞ்சி விலை உயர்ந்து காணப்பட்டு வந்த நிலையில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு கிலோ இஞ்சி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News September 30, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏகேடி பள்ளியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 30, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏகேடி பள்ளியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 29, 2024

விவசாயின் வீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருட்டு

image

தண்டலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (45) (விவசாயி). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 29, 2024

பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்

image

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் நகர செயலாளர் சுப்புராயலு தலைமையில், திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

News September 29, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய ஊராட்சிகள் இணைப்பு

image

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 8 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தென்கீரனூர், நீலமங்கலம், கா.மாமனந்தல்,மாடூர், பெருவங்கூர், சிறுவங்கூர், வீ.பாளையம், வீரசோழபுரம் ஆகிய எட்டு ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி நகராட்சியுடன் இணைத்து அரசாணையானது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.திருக்கோவிலூரில் இரண்டு ஊராட்சிகளும்,உளுந்தூர்பேட்டையில் ஏழு ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.

error: Content is protected !!