India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் வரும் அக்டோபர் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை மண்டபத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையம் போதுமான வசதிகள் இல்லாமல் உள்ளதால் புதிதாக பேருந்து நிலையம் கட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சி முடிவு செய்து அந்த பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைய உள்ளது. அந்த இடத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராஜ் ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி என பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbkak.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த 3 தினங்களாக இரவு பகலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவோ, அருவி அருகில் விளையாடவோ அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 70 விற்பனையாளர் பணியிடங்களில் நேரடியாக நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே நவ.7ஆம் தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், இன்று காலை 10 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். இதில், சமூக நலத்துறை அதிகாரிகள், மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபர் சொந்த நூலகங்களுக்கு விருது 2024-2025ம் ஆண்டு நடைபெற்றயுள்ள புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது. தங்கள் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்கள் குறித்த விபரங்களை தெரிவித்து பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.