Kallakurichi

News April 13, 2025

பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

image

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்

News April 12, 2025

தோஷம் நீக்கும் பக்தஜனேஸ்வரர் கோயில்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் உள்ளது பக்தஜனேஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் சிவன் சுயம்புவாக காட்சி தரும் நிலையில், இங்கு வந்து வழிபட்டால் எத்தகைய தோஷமாயினும் அது எளிதில் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க…

News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஈரோடு,திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர் நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 12, 2025

ரயில்வேயில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் அரசு மானியத்தில் திட்டங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

News April 12, 2025

கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்தவர் சீதாராமன், விவசாயி. இவர் கடந்த, 10ஆம் தேதி இரவு  தனது பைக்கில், வாழவந்தான்குப்பத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 11, 2025

கள்ளக்குறிச்சி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

▶மாவட்ட ஆட்சியர் – 04151-228802 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445005243 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 9445000939 ▶காவல் கண்காணிப்பாளர் 9444463398 ▶ கள்ளக்குறிச்சி தாசில்தார் – 9445000519 ▶ கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் – 8098094226 ▶ இணை சுகாதார இயக்குநர் – 7358151918 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 11, 2025

15 வயது சிறுமி திருமணம்; வாலிபர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி, தோப்பூரைச் சேர்ந்த விஜயகாந்த்,31. இவர் சோமண்டார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்த மோகூர் பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்தார். இரு வீட்டாரும் இணைந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். சின்னசேலம் மகளிர் ஊர் நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வாலிபர் மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு.

error: Content is protected !!