India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தார்.
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மோட்டார் காயில் கட்டும் பயிற்சி. காலம் 30 நாட்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது 18 முதல் 45 வரை. கல்வி தகுதி 8ஆம் வகுப்பு முதல், பயிற்சி காலங்களில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். நேர் காணல் நடைபெறும் நாள் 10.05.2025. கூடுதல் தகவலுக்கு 04151-225544, 73394 14616 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த நோயல் ஜாய்சி 595 மதிப்பெண்களை கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மே 1–ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா சாகை வார்த்தல் நிகழ்வோடு தொடங்கியுள்ளது. இதன்படி வரும் 13-ந்தேதி சாமி கண் திறத்தல், திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளுதல், 14-ம் தேதி தேரோட்டமும், பந்தலடி பகுதியில் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சி ▶️ SP: ரஜத் R சதுா்வேதி(9810837833)
ADSP : ▶️ சரவணன் – (9498178866)
ADSP : ▶️ செல்வராஜ் – (9498167110)
DSP : ▶️ திருகோவிலூர்: பார்த்தீபன் ( 9626121985, 9498100515)
DSP : ▶️ கள்ளக்குறிச்சி: தேவராஜ் ( 9498102298, 04151-220023, 9498100534)
ஷேர் பண்ணுங்க
காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.