India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டுக்கு நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் முதலமைச்சர் சுற்று பயணம் செய்கிறார். அவர் பங்கேற்கும் மேட்டுக்கடை தங்கம் மகால், முத்து மகால், தங்குமிடமான காலிங்கராயன் இல்லம் ஆகிய இடங்களில் தலா ஒரு தீயணைப்பு வாகனம் பாதுகாப்புக்கு நிறுத்தப்படும். ஈரோடு சோலாரில் நடக்கும் விழா மேடைக்கு அருகில் 3 வாகனங்களும், வாகன நிறுத்துமிடத்தில் 2 வாகனங்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு சோலாரில் நாளை மறுநாள் (டிச.20) நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான கல்வெட்டுகள் தயார் செய்யப்பட்டு, விழா அரங்கில் இன்று வைக்கப்பட்டது. இதை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி ஹாலில், ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 21 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி ஹாலில், ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் 21 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.
ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்படி, ஈரோடு ரயில் நிலையம் பகுதியில், மதுவிலக்கு போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடத்திய 2 பேரிடம், ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அசாம் மாநிலத்தை சேர்ந்த கஜனூஜ் ஜமால் (32), அசதூல் இஸ்லாம் (28) ஆகியோரை கைது செய்த போலீசார், ரூ.35 லட்சம் மதிப்பிலான 50 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர்கள், பவர் வீடர்கள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்திலும், பங்களிப்பு தொகையை குறைக்க 20 சதவீத கூடுதல் மானியத்திலும் வழங்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு, கோபியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.
ஈரோடு விவிசிஆர்.நகரை சேர்ந்த எலக்ட்ரீசியனான முகமதுஅன்சாரி (36). இவர் (8-10-2017) பைக்கில் சென்றபோது மற்றொரு பைக் மோதியது. இந்த தகராறில் முகமதுஅன்சாரியை 4 பேர் கொலை செய்தனர். போலீசார், தமிழ்செல்வன் (36), தியாகராஜன் (31), அருண் (31), லோகநாதன் (37) ஆகியோரை கைது செய்தனர். இதில் தமிழ்செல்வன் உயிரிழந்தார். இந்த வழக்கில் தியாகராஜன், அருண், லோகநாதன் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோட்டிற்கு தமிழக முதல்வர் நாளை வருகை தர உள்ளதையொட்டி, அங்கு 2,480 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுள்ள பணிகளை தொடங்கி வைக்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
1.முதலமைச்சர் வருகைக்காக 2,200 போலீசார் பாதுகாப்பு.
2. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.
3.ஈரோட்டில் திருக்குறள் வினாடி-வினா போட்டி.
4. தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.
5. 50% மானியத்தில் உயிர் உரங்கள்.
6. ஈரோட்டில் களை கட்டிய ஜவுளிசந்தை.
7. ஈரோடு இடைத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியா?.
Sorry, no posts matched your criteria.