Erode

News January 6, 2025

சென்னிமலை கோவிலில் பிப்.3-ல் தைப்பூச விழா 

image

ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப் பூச தேர்த்திருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா பிப்ரவரி 3ஆம் தேதி துவங்குகிறது. பிப்ரவரி 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி தேரோட்டத்திற்கு தேர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

News January 5, 2025

குரூப்-4 போட்டி தேர்வர்களுக்கு இனிய செய்தி 

image

ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

ஈரோடு – பவானி சாலையில் திடீரென தீப்பிடித்த கார் 

image

வீரப்பன்சதிதிரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இன்று (ஜன.5) சொந்த வேலை காரணமாக தனது காரில் ஈரோடு – பவானி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அசோகபுரம் அருகே சென்ற போது, காரின் முன்பக்கம் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதனையடுத்து அவர் அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை அணைத்தார். இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News January 5, 2025

பெருந்துறையில் வங்கதேசத்தினர் 7 பேர் கைது

image

ஈரோடு, பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் பாஸ்போர்ட் விசா இன்றி பல ஆண்டுகளாக தங்கியுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக பெருந்துறையில் தங்கி இங்குள்ள தொழில் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2025

தேனீக்கள் கடித்து முதியவர் பலி

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மகன் அருள் (36). மீன் பிடி தொழில் செய்து வரும் அருள், அக்காள் சரண்யா, தந்தை தங்கராஜ் ஆகியோர் பாசூர் காவிரிக்கரை பகுதியில் தென்னந்தோப்பில் மீன் பிடி வலையை பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது தேனீக்கள் கடித்ததில் தங்கராஜ் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் காயமடைந்தனர்.

News January 4, 2025

‘ரேஷன் கடைகளில் கருவிழி கருவி பொருத்த நடவடிக்கை’

image

ஈரோடு, தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கருத்தரங்கு தொடங்க விழா இன்று (ஜன.4) நடைபெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டார். அப்போது கைரேகை அடிப்படையிலான ரேஷன் அட்டையில் சில சிக்கல்கள் உள்ளதால், மாநிலத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளிலும் கருவிழி கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

News January 4, 2025

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை! 

image

ஈரோடு மாவட்ட மக்கள் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதள பக்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். வங்கி கணக்கு மற்றும் ஓடிபி எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். தெரியாத இணைப்பை கிளிக் செய்யவோ அல்லது மற்றவருக்கு அனுப்பவோ கூடாது என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு சைபர் கிரைம் எண்ணான 1930ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதை மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க!

News January 4, 2025

இடைத்தேர்வில் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்., தீர்மானம்

image

ஈரோடு மாநகர் மாவட்ட காங். கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது மகன் சஞ்சய் சம்பத் வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News January 4, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வினியோகம்

image

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று நேற்று பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்தனர். இந்த டோக்கன் வருகிற ஜனவரி 8-ம் தேதி வரை வீடு வீடாக சென்று வழங்கப்படும். ஜன. 9 அன்று முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். 

News January 4, 2025

சிறுத்தை குட்டிகள் நடமாட்டம்

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆசனூர் வனப்பகுதியில் உள்ள சாலையில் 2 சிறுத்தை குட்டிகள் நடனமாடியதை கண்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

error: Content is protected !!