Erode

News January 7, 2025

ஈரோடு இடைத்தேர்தல் இன்று வெளியாக வாய்ப்பு

image

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இன்று(7.1.25) தேர்தல் ஆணையர் அறிவிக்கவுள்ளார். இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்துடன் ஈரோட்டிற்கும் இடைத்தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 7, 2025

வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் தான் அதிகம்

image

தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். அதன்படி 9,55,356 ஆண்கள், 10,21,871 பெண்கள், 192 திருநங்கைகள் என மொத்தம் 19,77,419 வாக்காளர்கள் உள்ளனர்.

News January 6, 2025

தாளவாடி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம், பொள்ளாச்சி மைசூர் தேசிய நெடுஞ்சாலை, தமிழக எல்லையான, புழிஞ்சூர் சோதனை சாவடி அருகே, கர்நாடக மாநிலத்தில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு, சரக்கு லாரி ஒன்று வந்தது. அப்போது, மதுபோதையில் நடந்து வந்த, புழிஞ்சூர் தொட்டி பகுதியைச் சேர்ந்த கோனூர் ஆன் என்பவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

News January 6, 2025

2.26 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்த விவசாயி 

image

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே புது வள்ளியம்பாளையத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது.கோபிசெட்டிபாளையம் அடுத்த அளுக்குளியை சேர்ந்த விவசாயி பழனிவேல் (60) என்பவர் தனக்கு சொந்தமான 2.26 ஏக்கர் நிலத்தை, வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தானமாக வழங்கினார். இதற்கான பத்திரத்தை வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசனிடம் வழங்கினார்.

News January 6, 2025

மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று (6.1.25)  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையை அவர் வழங்கினார்.

News January 6, 2025

‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி

image

ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள டெக்ஸ்வேலியில் விழாக்காலங்களில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி, 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு ‘நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உரி அடித்தல், சிலம்பாட்டம், கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இலவச அனுமதியுடன் நடைபெற உள்ளது.

News January 6, 2025

மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 97.5 அடியாகவும் நீர் நீர் வரத்தானது 375 கனாடியாகவும் நீர் வெளியேற்றமானது 900 கனஅடி ஆகவும் உள்ளது. குண்டேரிப்பள்ளம் (41.75) வரட்டுப்பள்ளம் (33.46) ஆகிய இரண்டு அணைகளிலும் முழு கொள்ளளவும் நிரம்பி வழிகிறது. பெரும்பள்ளம் 30.84 அடியில் தற்போது 21.95 கனஅடியாக நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 6, 2025

தீ வைத்து ஒருவர் உயிரிழப்பு

image

புளியம்பட்டி நேருநகர் வீதியில் குடியிருந்து வருபவர் வினோத் (35). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று இரவு 10 மணி அளவில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் படுகாயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2025

சிறப்பு ரயில் அறிவிப்பு

image

மகாகும்பமேளாவை முன்னிட்டு ஈரோடு வழியே கயாவுக்கு சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் வடக்கு – கயா சிறப்பு இரயில் ஜன.7, 21, பிப்., 4ல் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே வெள்ளி அதிகாலை 1:30க்கு கயாவை செல்லும். மறுமார்க்கமாக ஜன.10, 24, பிப்., 7ல் இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை 10:15க்கு திருவனந்தபுரம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

ஈரோட்டில் அடுத்த மாதம் இடைத்தேர்தல்?

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த இவிகேஎஸ்.இளங்கோவன் டிச.14 சென்னையில் காலமானார். பின் இத்தொகுதி காலியாக உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (பிப்.) நடக்க இருப்பதால் அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் பணி  நடைபெறுகிறது.

error: Content is protected !!