India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி, ஜனவரி 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் இலவச சீருடை, உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 0424-2400338, 87783-23213,72006-50604 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வரும் 10-ம் தேதி தொடங்கி, 17-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை வருகிறது. தேர்தல் விதிமுறையின்படி அன்றைய தினமும் வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விரிவான அறிக்கை கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலத்தின் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 10 முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், நாமக்கல் திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோவில், கரூர் ஆகிய பகுதிகளுக்கு 300 புறப்பாடுகள் பேருந்து இயக்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, 24 மணி நேரத்துக்குள், அரசு கட்டிடங்களில் உள்ள, அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள், உருவப்படங்கள் மறைக்கப்படும் என்று, தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ் தெரிவித்துள்ளார். மேலும் 48 மணி நேரத்துக்குள் தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், மறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, தாட்கோ மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 32 வயது நிரம்பியவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகம் அல்லது 0424-2259453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோட்டில் பிப் 5ஆம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் சிபிஎம் ஆதரவளிக்கும் என மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில், மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் வேட்பாளர் யார் என்பது குறித்து, காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக முதல்வருடன் ஆலோசித்து, விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடாது போன்ற உத்தரவுகள் தேர்தல் ஆணையம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள், தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் ஆயத்தமாகியுள்ளனர்.
ஈரோட்டில் பிப் 5ஆம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 26 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி உறவினர் ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.