Erode

News January 9, 2025

தொழில்நுட்ப பயிற்சிக்கு அழைப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சித் திட்டம் வழங்கப்படுகிறது. இதன்படி தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சிக்கு +12 தேர்ச்சி ஐடிஐ டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர www.tahdco.com இல் பதிவு செய்ய வேண்டும். விபரத்திற்கு ஈரோடு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.

News January 9, 2025

நாளை முதல் வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிட நாளை (10.1.25) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு 3 நாள் மட்டுமே, அதாவது 10, 13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

ஈரோடு: ரூ.50,000 மேல் கொண்டு செல்ல தடை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000 மேல், கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வரும் பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2025

வேட்பாளர் ரேஸில் யார்?

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்., சார்பில் திருமகன் ஈவேரா மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரே குடும்பத்துக்கு சீட் கொடுக்க எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் ராஜனும், திமுகவினர் சிலரும் சீட் பெறுவதற்கு காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இதற்கு முடிவு 2 நாளுக்குள் தெரிந்துவிடும். பிப்.5ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

News January 8, 2025

இடைத்தேர்தல்: 5 வகையான குழுக்கள் அமைப்பு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல்களை கண்காணிக்க 5 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பறக்கும்படை குழு, 3 நிலையான கண்காணிப்பு குழு, 1 வீடியோ கண்காணிப்பு குழு, 1 வீடியோ பார்க்கும் குழு, 1 கணக்குகள் தணிக்கை குழு உள்ளன. நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டும் ஜன.10 முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.

News January 8, 2025

இந்த நேரத்தில் மட்டுமே வேட்புமனு 

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜன.10 தொடங்கி ஜன.17 வரை நடக்கிறது. ஆனால் அரசு விடுமுறை நாட்களைத் தவிர ஜன.10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவித்து உள்ளார்.

News January 8, 2025

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பிப்.8 அன்று நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார். எனவே தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அங்கு கொண்டு சென்று வைக்கப்படும்.

News January 8, 2025

இடைத்தேர்தலில் போட்டியிடுவோம்: சீமான் 

image

ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து, கள்ளக்குறிச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் பேசிய போது ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என்று சீமான் மேலும் கூறியுள்ளார்.

News January 8, 2025

ஈரோடு மஞ்சள் சந்தைகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (2), பெருந்துறை, கோபி ஆகிய இடங்களில் உள்ள மஞ்சள் சந்தையில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 19 வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் ஏலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கிறது. ஜன 10 முதல் ஜன 17 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் ஜன.10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சங்கரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!