Erode

News January 10, 2025

ஈரோடு கிழக்கில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

News January 10, 2025

ஈரோடு கிழக்கில் இன்று வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று (ஜன.10) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20 ஆகும். இதில் ஜன.10 முதல் 17 வரை – ஜன.11, 12, 14, 15, 16 விடுமுறை நாட்களாக இருப்பதால், ஜன.10,13,17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய முடியும்.

News January 9, 2025

ஈரோடு கிழக்கில் நாளை வேட்பு மனு தாக்கல்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை (ஜன.10) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20 ஆகும். இதில் ஜன.10 முதல் 17 வரை – ஜன.11,12, 14, 15, 16 விடுமுறை நாட்களாக இருப்பதால், ஜன.10,13,17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய முடியும்.

News January 9, 2025

சீமான் உருவ பொம்மையை எரித்து போராட்டம் 

image

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சீமான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்து பன்னீர்செல்வம் பூங்கா அருகே தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் திடீரென சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

News January 9, 2025

குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தேறும் திங்கள் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உட்பட அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், இடைத் தேர்தலால் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை 1077, 0424-2260211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் 9791788852 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம்.

News January 9, 2025

ஈரோட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் இருந்ததும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News January 9, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு தற்காலிகமாக நிறுத்தம்

image

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

சங்கமேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல் 

image

பவானி ஸ்ரீ சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் இன்று இரவு04.30 மணிக்கு பெருமாள் பரமபத வாசல் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. சரியாக விடியற்காலை 4:30 மணி அளவில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் லட்சுமி தாயாருடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வர தயார் நிலையில் உள்ளார். பொதுமக்கள் ‘ஓம் நமோ நாராயணா நாராயணா’ என்று கோஷமிட்டபடி உள்ளனர்.

News January 9, 2025

2021-இல் இருந்து 5ஆவது முறை தேர்தல்

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகுதி வாக்காளர்கள் கடந்த 2021 முதல் ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என தற்போது 5வது முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதன்படி, சட்டமன்ற தேர்தல் – 2021, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022, இடைத்தேர்தல் – 2023, நாடாளுமன்றத் தேர்தல் 2024, தற்போது மீண்டும் 5வது முறையாக இடைத்தேர்தல் – 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

இடைத்தேர்தல் : மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் குறைத்தீர் கூட்டம் நடத்தப்படும். பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை வழங்கி தீர்வு காண்பர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

error: Content is protected !!