India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வயர்மேன் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தாளவாடி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <
ஈரோடு, கோனார்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை, நில பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு,தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
ஈரோடு எலவமலையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரசவத்திற்காக, ஜெயம்கொண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே சேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் சேகரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சேகர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக நிறுவனங்களில் வரும் 30-ம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையர் தளலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு, மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது. இங்கு கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT!
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.