India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
ஈரோடு, கவுந்தப்பாடி பெரிய புலியூரை சேர்ந்தவர் அய்யனார் (42). கூலி தொழிலாளியான இவருக்கு, குடிப்பழக்கம் இருந்ததால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த அய்யனார், வீட்டு சமையலறையில் நூல் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200, மாட்டிற்கு ரூ.37,500 இழப்பீடு வழங்க அரசு அறிவித்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2024 செப்., முதல் கடந்த ஜன., வரை நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு ரூ.6,000 இழப்பீடு வழங்கும் பணி துவங்கியது. மக்களே, உங்களது கால்நடைகள் நாய் கடித்து இறந்தால், உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பதிவு செய்தால் தான் இழப்பீடு கிடைக்கும் (SHARE பண்ணுங்க)
ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயில் சோழர்களால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் புகழப்படும் 108 முருகன் கோயில்களில் இதுவும் ஒன்று. வேலாயுதசாமி எனும் முருகன் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தைப்பூசம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும். மன அமைதி பெற பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசித்துவிட்டு செல்கின்றனர். SHARE பண்ணுங்க.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல், ஐடிஐ வளாகம் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். இதை SHARE பண்ணுங்க.
கோவை, காரமடை தாயனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தனது 3 வயது பேரனுடன் நேற்று, ஈரோடு, புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கலியுக சித்தர் பீடத்திற்கு வந்துள்ளார். பேரனுடன், சித்தர் பீடத்தில் உள்ள சிலைகளுக்கு முன்பு அமர்ந்திருந்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், 4 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
▶️ஈரோடு மாநகராட்சி ஆணையர் 0424-2258312. ▶️ பவானி நகராட்சி ஆணையர் 04256-230556. ▶️ கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் 04285-222159. ▶️சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் 04295-220513. ▶️ புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையர் 04295-267061. மக்களே, இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.