Erode

News October 11, 2025

ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்!

image

ஈரோடு எஸ்.பி அலுவலக வளாகத்தில் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. தற்போது எஸ்பி அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடங்கள், மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனை எஸ்.பி அலுவலகத்தின் பின்புறம் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள அறை, மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கப்பட்டது.

News October 11, 2025

ஈரோட்டில் புதிய மாவட்டம் கோரி மனு

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்துக்கு உட்பட்ட தொட்டகாசனுர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் இன்று (11-10-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்திலிருந்து சத்தியமங்கலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தாளவாடி வட்டார பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர். மனுவினை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தீர்மானத்தில் கொண்டு வருவதாக உறுதி அளித்தனர்.

News October 11, 2025

ஈரோட்டில் 4 பேர் அதிரடி கைது

image

சித்தோடு பேரோடு வேலன் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுலகண்ணன் இவர் சீனாபுரத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது காஞ்சிக்கோவில் கொங்கு நகர் பகுதியில் லிப்ட் கேட்க வண்டியை நிறுத்தி உள்ளார் அப்பொழுது 4 பேர் கத்தியை காட்டி பணம் செல்போனை பறித்தனர். புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் நான்கு பேர் கைது செய்தனர்.

News October 11, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News October 11, 2025

ஈரோடு: 12th போதும் 7267 அரசு வேலைகள்! உடனே APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – அக். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

News October 11, 2025

ஈரோடு: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

ஈரோடு மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News October 11, 2025

ஈரோடு: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 – 50400 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 11, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 48; நாராயண வலசு பகுதியில் டாஸ்மாக் பார் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். அங்கு போதையில் வந்த இருவர், முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டு முகத்தில் குத்தியதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. வீரப்பன்சத்திரம் போலீசில் அவர் அளித்த புகாரின்படி, சரவணகுமார் 25, கதிரேசன் 24, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

News October 11, 2025

ஈரோடு: மனைவியை எரித்துக் கொன்ற கணவன்

image

ஈரோடு கே கே நகர் பகுதியை சேர்ந்த குமரேசன்(41) ஆட்டோ டிரைவர் ஆவார். இவருடைய மனைவி ரேவதி, குடும்ப தகராறில் குமரேசன் கடந்த 15. 9.2019 அன்று மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மனைவி ரேவதி உயிரிழந்ததை அடுத்து ஈரோடு தாலுகா போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நேற்று நீதிபதி சொர்ண குமார் குமரேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 11, 2025

அந்தியூர்: ஜேசிபி திருடிய நபர் கைது

image

அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஜேசிபி ஓட்டிக்கொண்டு வந்த நபர், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரை தடுத்து நிறுத்தி, விசாரணை செய்ததில், அவர் ஓட்டி வந்த ஜேசிபி இயந்திரம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!