Erode

News August 8, 2025

ஈரோடு: ரூ.70,000 பணம், தங்கம் தந்து இலவச திருமணம்!

image

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், இந்து அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT

News August 8, 2025

ஈரோடு: மின் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

image

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஏடி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில், இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

News August 8, 2025

ஈரோடு மக்களே: முதல்வருக்கே புகார் அளிக்கலாம்!

image

ஈரோடு மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News August 8, 2025

ஈரோடு: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>https://www.bankofbaroda.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று விண்ணபிக்கலாம்.SHARE பண்ணுங்க!

News August 8, 2025

ஈரோடு மக்களே முற்றிலும் இலவசம்!

image

ஈரோட்டில் உள்ள, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, வரும் 18ம் தேதி, பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 31 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 8778323213 என்ற எண்னை அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 7, 2025

சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து உடனடியாக கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News August 7, 2025

ஈரோடு: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 7, 2025

ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

image

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

News August 7, 2025

ஈரோட்டில் இலவசம்.. உடனே CALL பண்ணுங்க!

image

ஈரோடு கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் நடத்தும் பெண்களுக்கான இலவச தையல்கலை பயிற்சி 18-08-2025 முதல் 24-09-2025 வரை நடைபெறுகிறது. இதற்கு 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பயிற்சி உபகரணங்கள், சீருடை, உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 87783-23213, 0424-2400338 தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

ஈரோடு அரசு ஐடிஐயில் தொழில் பழகுனர் பயிற்சி முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, ஈரோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தொழில் பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!