Erode

News October 13, 2025

ஈரோட்டில் குறைந்த விலையில் பைக் கார் வாங்க வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்குப் படை போலீஸாரால் பயன்படுத்தப்பட்ட பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. சத்தியமங்கலம் புதுகுய்யனூரில் உள்ள சிறப்பு இலக்குப் படை வளாகத்தில் வரும் 16 ம் தேதி இந்த பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலம் எடுக்கும் அன்று காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 2மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு முன்பணம் ரூ.2000 முன்பணம் செலுத்தவேண்டும். SHARE பண்ணுங்க

News October 13, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்!

image

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகளை இளைஞர்கள் சிலர் போதைக்காக பயன்படுத்துவதாக போலீசாரக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார் சித்தோடு மூவேந்தர் நகரைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அந்தியூரை சேர்ந்த கார்த்திக் என்ற இரு இளைஞர்களை பிடித்து 20 போதை மாத்திரைகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

News October 13, 2025

ஈரோடு மாவட்டத்தில் 404 பேர் ஆப்சென்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி மற்றும் வேளாளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது.மொத்தம், 1901 பேர் விண்ணப்பித்த நிலையில், 1,497 பேர் தேர்வை எழுதினர். 404 பேர் வரவில்லை. தேர்வை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

News October 12, 2025

ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News October 12, 2025

ஈரோடு மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

ஈரோடு: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

image

ஈரோடு மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 29.10.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News October 12, 2025

ஈரோட்டில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி!

image

ஈரோடு: சித்தோட்டில் செயல்பட்டு வரும் கிராமப்புற சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம் (RUDSETI) சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வரும் அக்.19 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் சேருபவர்களுக்குப் பயிற்சி கட்டணம், உணவு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்துச் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 8778323213, 7200650604, 0424-2400338 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் .

News October 12, 2025

சென்னிமலை பக்தர்களுக்கு நற்செய்தி!

image

சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோவில் மலைப்பாதையானது ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீ. தொலைவுக்கு மழைநீர் தேங்காத வகையில் இரு வழிச் சாலையாக சீரமைத்து அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து காத்திருப்புக் கூடம் மற்றும் பசு மடம் ஆகிய முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு்க.ஸ்டாலின் நாளை காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

News October 12, 2025

ஈரோடு: டூவீலர்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?அதற்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!