India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். <
அறச்சலூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி(55). இவர், சென்னிமலை அருகே தோட்ட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை கோவில்பாளையத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்ப அறச்சலூர் செல்வதற்காக பைக்கில், நாமக்கல் டூ தண்ணீர் பந்தல் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் கஸ்தூரி சம்பவயிடத்திலே உயிரிழந்தார்.
ஈரோடு தண்ணீர் பந்தல்பாளையம் அருகே உள்ள பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அருகே உள்ள மளிகை கடையில் குட்காபொருட்கள் விற்பனைசெய்வது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கிருஷ்ணன் (69) என்பவரை கைது செய்தனர்.
ஈரோடு மின்சார வாரிய கிளை கோட்டம் வாரியாக பொறியாளர்கள் எண்கள் ஈரோடு-9445852150, சத்தியமங்கலம்- 04295-220232, பவானி- 04256-232990, பெருந்துறை- 9445852039, கோபிச்செட்டிபாளயம்-04285-227496. உங்கள் பகுதியில் உள்ள மின்சாரத்துறைக்கு கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
▶️ஈரோடு டவுன் காவல் நிலையம் 9498101220. ▶️மொடக்குறிச்சி காவல் நிலையம் 3438101242. ▶️பெருந்துறை காவல் நிலையம் 9498101244. ▶️கொடுமுடி காவல் நிலையம் 9498101240. ▶️பவானி காவல் நிலையம் 9498101213. ▶️அந்தியூர் காவல் நிலையம் 9498101218. ▶️கோபி காவல் நிலையம் 9498101232. ▶️நம்பியூர் காவல் நிலையம் 9498101243. ▶️சத்தி காவல் நிலையம் 9498101246. ▶️தாளவாடி காவல் நிலையம் 9498101249. இதை SHARE பண்ணுங்க.
ஈரோடு, அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் பிரதிபா(19). இவர் சேலம், சங்ககிரியில் உள்ள மருந்தியல் கல்லூரியில், 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், குமாரபாளையத்தில் உள்ள ஹோட்டலுக்கு செல்ல, அவரது தந்தை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரதிபா, விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மும்மூர்த்திகளும் (சிவன், பிரம்மா, திருமால்) அருள்பாலிக்கும் ஒரே ஆலயம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. மேலும், பித்ரு தோஷம், நாக தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கவும், மன அமைதி பெறவும் இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் 210வது திருத்தலமாகத் திகழ்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.