India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாரியம்மன் கோயில் – பண்ணாரி. பத்ரகாளியம்மன் கோயில் – அந்தியூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பாரியூர். மாகாளியம்மன் கோயில் – கருங்கல்பாளையம். எல்லையம்மன் கோயில் – பர்கூர். கரியகாளியம்மன் கோயில் – பிச்சரமல்லனூர். செல்லாண்டியம்மன் கோயில் அவல்பூந்துறை. பகவதியம்மன் கோயில் – கோபி. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு அதிகாரபூா்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள், புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு-சித்தோடு சாலையில் எஸ்விஎன் பள்ளி அருகே செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தையோ 0424-2998632,94892 40485 ஆகிய எண்களை அணுகலாம்.
ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் ராம்குமார் (26). இவர் நேற்று இரவு மது போதையில், வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் தனிநபர் கடன்,கைவினை கலைஞர் கடன்,சுயஉதவிக்குழுகடன் திட்டங்களுக்கு, விண்ணப்பம் பெற முகாம் நடக்க .கடன் பெற விரும்புவோர்,ரேஷன்,ஆதார் கார்டு,இருப்பிட சான்று, ஜாதிச்சான்று,வருமான சான்று நகல்,பாஸ்போர்ட் அளவு போட்டோ-4,தொழில் நுட்பஅறிக்கை எடுத்து ஈரோட்டில் ஏப்ரல் 24 தேதி வங்கிக்கு வர வேண்டும்.காலை10முதல் மாலை5 மணி வரை நடைபெறும்.
ஈரோடு கோபி அருகே புகழ்பெற்ற பச்சைமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க
ஈரோடு மாவட்டத்தில் தனியார் கடைகள், வர்த்தக, உணவு நிறுவனங்கள், மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இந்த பெயர் பலகை தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும், அதன் பின் விரும்ப மொழியிலும் அமைக்கலாம். கால அவகாசத்திற்கு பின் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள, ஜிஎஸ் காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், சொந்தமாக ‘ஏர்கன்’ வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம், இவரது வீட்டிலிருந்த சிறுவர்கள், எதிர்பாராதவிதமாக ஏர்கன்னை எடுத்து வெங்கடாச்சலத்தை சுட்டுள்ளனர். இதில் இடுப்பின் கீழ் பகுதியில், அலுமினிய குண்டு பாய்ந்தது, வெங்கடாச்சலம் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோட்டில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் விடுமுறையை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அன்று சோலார் மது விலக்கு போலீஸ்சார் ரோந்து செல்லும்போது 5 ஆண்கள் 1 பெண் உட்பட சீக்கினர். மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 33 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஈரோடு, கோபி, பவானி நகராட்சிகளுடன் பஞ்சாயத்துகளை இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளனர், மாவட்ட அதிகாரிகள். அதன்படி ஈரோடு மாநகராட்சி, கோபி, புன்செய்புளியம்பட்டி, பவானி நகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம்,நொச்சிகுட்டை, நல்லூர், குருப்பநாய்க்கன்பாளையம் பஞ்.களை இணைக்கும் முடிவை கைவிட பரிந்துரையாக அனுப்பி உள்ளனர்
Sorry, no posts matched your criteria.