India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகிரியில் பழமை வாய்ந்த ஶ்ரீ பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான முருகன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அளித்த புகாரின்படி, சத்தியமங்கலம் போலீசார், முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது வேட்பாளரின் முகவர் ஆகியோர் தங்களது தேர்தல் வரவு செலவு கணக்கு ஒத்திசைவு கூட்டமானது இன்று (4ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் செலவின பார்வையாளராக லட்சுமி நாராயணா முன்னிலை வகிக்க உள்ளார் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலைத்துறை ஈரோடு சிறகுகள் மற்றும் தனியார் நிறுவனம் சேர்ந்து சென்னிமலை முருகன் கோயிலில் ஸ்கிரீன் டெம்பிள் ப்ராஜெக்ட் என்னும் பெயரில் மக்கும் குப்பைகளை சேகரிக்க நான்கு பெரிய ட்ரம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங்களை வைத்து குங்குமம் மற்றும் ஊதுபத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் ஏப்.5 முதல் 8ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக 60 அடி உயரம் கொண்ட தேர் அலங்கரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுப்பர் .

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் கே.இ பிரகாஷ்க்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று குமாரபாளையத்தில் விவசாய தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அந்தியூர் வட்டம் வெள்ளி திருப்பூர் கிராமத்தில் கலர் காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் அனைவரும் காவேரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக் குடம் எடுத்து வந்து அம்மனை அலங்காரம் ,அழகு குத்தியும் , பொங்கல் வைத்து நேத்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், தேர்தலில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து வரும் நாளை (4ம் தேதி) முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 1,111 வாக்கு சாவடிகள் பதட்டமானவை . இந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமரா, விடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானிசாகா் ஆகிய தொகுதிகளுக்கு கூடுதலாக கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.