Erode

News August 10, 2025

ஈரோட்டில் கூட்டுறவு சங்கத்தில் வேலை: ரூ.76,380 சம்பளம்!

image

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 59 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 10, 2025

பெருந்துறை அருகே பைக் மீது லாரி மோதி விபத்து!

image

ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சிவசக்தி. இருவரும் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்கின்றனர். நேற்று பைக்கில் சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு சென்றனர். பெருந்துறை அருகே பெரிய வேட்டு பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சிவசக்தி பலியானார் கோவிந்தன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 10, 2025

ஆசனூர் அருகே தக்காளி வேன் கவிழ்ந்து விபத்து

image

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து ஈரோட்டிற்கு, தக்காளி பாரம் ஏற்றி சென்ற மினி வேன், தமிழக கர்நாடக எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பிக்கப் வேணுடன் மோதி விபத்து ஏற்பட்டது. தக்காளி பழங்கள் ரோட்டில் சிதறின. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News August 10, 2025

ஈரோடு: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை APPLY NOW

image

ஈரோடு மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிடி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்,<> இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 10, 2025

ஈரோட்டில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சித்தோடு, ராயபாளையம், நரிப்பள்ளம், பெருமாள்மலை, மேல் திண்டல், கீழ் திண்டல், மூலக்கரை, மேட்டுக்கடை, பெருந்துறை தெற்கு பகுதி, வெள்ளோடு, ஈங்கூர், பெருந்துறை ஆர்.எஸ், நந்தா கல்லூரி, கொங்கு காலேஜ், சின்னசெட்டிபாளையம், நொச்சிகாட்டுவலசு, கொல்லம்பாளையம், ராம் நகர் ஆகிய பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.

News August 9, 2025

ஈரோட்டில் 50 % மானியம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

image

ஈரோட்டில் கால்நடைகளின் உற்பத்தியினை பெருக்க விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 % மானியத்தில் வழங்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 2 பசுமாடுகள் மற்றும் பசுந்தீவனம் பயிரிட்டு பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகள், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்தார். ஏழை குடும்பங்களுக்கு SHARE IT

News August 9, 2025

ஈரோடு: தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நாளை மறுநாள் (ஆக.11) நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட 1,10,866 குழந்தைகளுக்கு 2,050 அங்கன்வாடி மையங்கள் மூலமாகவும், மேலும் பள்ளி, கல்லூரிகளில் 5,28,766 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

News August 9, 2025

ஈரோடு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 9, 2025

ஈரோடு: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

image

ஈரோடு மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து, வரும் அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது. இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

ஈரோட்டில் இலவச Tally பயிற்சி! APPLY NOW

image

தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் ஈரோட்டில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இத SHARE பண்ணுங்க!

error: Content is protected !!