Erode

News April 17, 2025

ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

image

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

News April 16, 2025

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

image

வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நபர்கள், போலி வாட்ஸ்அப் அழைப்புகள், செய்திகள் மூலம் பயனர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்கள் OTP, தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்றங்களை புகாரளிக்க 1930 (24×7) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக மகுடேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 16, 2025

பார்மஸிஸ்ட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி !

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் (பார்மஸிஸ்ட்) பணிபோட்டி தேர்வுகளுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0424-2275860, 9499055943 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

News April 16, 2025

பவானியில் பாலியல் தொழில் ! 

image

பவானி கூடுதுறை ரோட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்தத் தகவலின் பேரில் பவானி டி.எஸ்.பி ரத்தினகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில்  தங்கி இருந்த ஐந்து நபர்கள் மற்றும் ஐந்து பெண்களை விசாரித்தனர். விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விடுதியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

News April 15, 2025

தீராவினை தீர்க்கும் திண்டல் முருகன்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 15, 2025

ஒரு க்ளிக் உங்க பணம் காலி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

ஈரோடு மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)

News April 15, 2025

ஈரோடு அருகே விபத்தில் ஒருவர் பலி!

image

ஈரோடு, கோபி அருகே கரட்டிபளையத்தை சேர்ந்தவர் கணேசன் (70). கூலித்தொழிலாளியான இவர், நேற்று சத்தி சாலையில், போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2025

ஈரோடு மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0424-2262444▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0424-2260100 ▶️ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 14, 2025

ஈரோடு: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

மாரியம்மன் கோயில் – பண்ணாரி. பத்ரகாளியம்மன் கோயில் – அந்தியூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பாரியூர். மாகாளியம்மன் கோயில் – கருங்கல்பாளையம். எல்லையம்மன் கோயில் – பர்கூர். கரியகாளியம்மன் கோயில் – பிச்சரமல்லனூர். செல்லாண்டியம்மன் கோயில் அவல்பூந்துறை. பகவதியம்மன் கோயில் – கோபி. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!