Erode

News April 16, 2024

கதாநாயகன் உதயநிதி தான்

image

ஈரோட்டில் இன்று கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலின் கதாநாயகன் உதயநிதி தான். அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த தேர்தலோடு மோடி அண்ணாமலை போன்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தில் பழைய வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

News April 16, 2024

கருப்பட்டி ரூ. 4. 85 லட்சத்திற்கு ஏலம்

image

ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் குன்னத்தூரில் இயங்கி வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் தென்னங்கருப்பட்டி வரத்து 2000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ. 300000 க்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி வரத்து 1000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.185 வீதம் ரூ. 185000 க்கும் என மொத்தம் ரூ. 485000 க்கு ஏலம் போனது.

News April 16, 2024

ஈரோடு அருகே பேனரால் பரபரப்பு

image

ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் நேற்று சாலையோரம் அப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் இங்கு தனிநபர் ஒருவர் பொதுவழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 16, 2024

அந்தியூரில்: ரூ.77 ஆயிரம் பறிமுதல்

image

அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியில் நேற்று தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி பிரபு தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் சென்ற சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அம்மாபேட்டையை சேர்ந்த ஜாகிர் உசேன் (36), உரிய ஆவணங்களின்றி 77 ஆயிரத்து 40 ரூபாய் வைத்திருந்ததை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.

News April 15, 2024

குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் நூதன பிரச்சாரம்

image

ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா என வாக்கு சேகரித்தார். 

News April 15, 2024

அரசு அலுவலர்களுக்கு விளக்க பயிற்சி

image

சித்தோடு அடுத்த அரசினர் பொறியியல் கல்லூரியில் மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களை தேர்தல் நாளன்று பாதுகாப்பாக வைக்கும் பணிக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

News April 15, 2024

கணேசமூர்த்தி படத்திற்கு வைகோ மரியாதை

image

ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று
ஈரோடு – பெரியார் நகர் பகுதியில் உள்ள மறைந்த ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின் கணேசமூர்த்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

News April 15, 2024

ஈரோடு: மக்களே கொண்டாட தயாரா இருங்க

image

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.15) தொடங்கியது.
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப். ,15) காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கமேஸ்வரர் சன்னதியில் உள்ள கொடிக்கம்பத்தில் நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

News April 15, 2024

4314 பேர் தபால் வாக்கு பதிவு

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2843 பேர் மற்றும் ராணுவத்தில் உள்ள 3 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2 ஆம் கட்ட பயிற்சியின் போது 1468 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மட்டும் இதுவரை 4314 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 15, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் பவானி சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் பிளாஸ்டிக் கம்பெனியில் பணியாற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய் யாதவ் (38) என்பவர் டெக்ஸ்ட் வேலி அருகே சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சித்தோடு போலீஸார் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!