India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நெய்தாளபுரம் கிராமத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் காளம்மா (70) என்ற மூதாட்டி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி தாளவாடி வனத்துறை மற்றும் ஆசனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மலைப்பகுதியில் பட்டப்பகலில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய பின்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 1, கட்டுப்பாட்டு இயந்திரம் 2, வி.வி.பேட் இயந்திரம் 7 மட்டுமே பழுதாகி இருந்தது. அவை உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விடுமுறையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு – சூரம்பட்டி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. எனவே போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குப்புசாமி (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு அளவில் முதல் முறையாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் கடந்த 2 மாதங்களாக வெயில் குறையாமல் நீடித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மேலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும், 6 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 7 மணி வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியுடன் பல்வேறு பகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர் வாக்கு சாவடி எண் 28ல் 6 மணிக்கு முன்னர் 70க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்களுக்கு வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதியளித்தார்.
ஈரோடு, கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா , இலக்கிய சம்பத் ஆகிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் முதல் முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பின்பற்றி, ஒற்றுமையாக மூவரும் ஒன்றாக வந்து வாக்களித்ததாக தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து அந்தியூர் சொல்லுவதற்கு சுமார் 1.30 மணி நேரம் பேருந்துகள் இல்லாத காரணத்தால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஈரோட்டில் இருந்து 1.20 மணிக்கு இயக்கப்படும் அந்தியூர் வழியாக சத்தி வரை செல்லும் அரசு பேருந்தும் 1.50 மணிக்கு அந்தியூர் வழியாக கோவிலூர் செல்லும் அரசு பேருந்தும் 2.15 மணிக்கு பழனியில் இருந்து ஈரோடு வழியாக அந்தியூர் செல்லும் பேருந்தும் இயக்கப்படவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதியான தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் 15 வாக்குச்சாவடிகள் நிழல் வாக்குச்சாவடிகளாக உள்ளன. இங்கு இணைய வசதிகள் இல்லாததால், வெப்-கேமராக்களுக்கு பதில், வீடியோ பதிவு செய்யப்பட்ட உள்ளது. சோதனை வாக்குப்பதிவு முதல் தேர்தல் முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கும் வரை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மையத்தில் உள்ள வாக்குசாவடியில் முன்னாள் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் கேரள முன்னாள் கவர்னருமான பி. சதாசிவம் தனது மனைவி சரஸ்வதியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில் “மக்களவை தேர்தலிலுக்காக முதல்முறையாக சொந்த கிராமத்தில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்றார்
Sorry, no posts matched your criteria.