Erode

News April 29, 2024

வாக்குப்பதிவு இயந்திர அறையில் சிசிடிவி பழுது

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு சிசிடிவி கேமரா நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை இயங்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர் தொழில்நுட்ப கோளாறல் ஏற்பட்ட பிரச்சனை சரிசெய்யப்பட்டதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கார தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

தொகுதிக்கு 100 பணியாளர்கள் நியமனம்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 80 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

News April 28, 2024

ஈரோடு: நீீட் தேர்வு எழுதும் 4,700 பேர்

image

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொதுமருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்கப்பட்டது .

News April 28, 2024

ஈரோட்டில் ட்ரோன்களுக்கு தடை

image

ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் வான்வழி ஆளில்லா வாகனங்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

News April 28, 2024

ஈரோட்டில் இரட்டை சதம்

image

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்து வருவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் எலுமிச்சை விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 1 டன் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ. 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News April 28, 2024

ஈரோடு: ஆன்லைன் மோசடி: இருவர் கைது

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீசார் பொது மக்களிடம் ஆன்லைன் டாஸ்க் கம்ப்ளீட் பிராடுகளில் ஈடுபட்டு வந்த நந்தகோபாலன் மற்றும் சாமிநாதன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர். அவர்களிடம் ரூ.6,72,600 பணம், சிம் கார்டு-8, ஏடிஎம் ஸ்வைப் மிஷின்-1 மொபைல்-7, செக் புக்-15, ஏடிஎம் கார்டு-19 போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

News April 27, 2024

ஈரோடு மாவட்ட மக்களுக்கு அலர்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலை அளவு, இந்தியா அளவில், 2வது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள், கோடை வெப்ப பாதிப்புகளை தடுக்க காலை, 11 மணி முதல் மாலை, 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், இளநீர், பழச்சாறு போன்றவை பருகலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

ஈரோடு பண்ணாரியம்மன் கோயில் சிறப்புகள்!

image

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்னும் ஊரில் ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்றி வனமாக இருக்கும் இப்பகுதியின் நடுவின் பெரிய அரண்மனை போன்று காட்சியளிக்கிறது இக்கோவில். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் வரலாறாக செவிவழிச் செய்தியாக கதைகள் கூறப்படுகின்றன. அழகிய கோபுரத்துடனும், அர்த்த, மகா, சோபன மண்டபத்துடன் இக்கோவில் உள்ளது.

News April 27, 2024

நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

image

கர்நாடகாவில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. எனவே கர்நாடக நாடாளுமன்ற தேர்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லையில், அந்தியூர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளில் 10 நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நேற்று முடிந்த நிலையில், நிலை கண்காணிப்பு குழுக்கள் இன்று, கலைக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 27, 2024

மரக்கடையில் பயங்கர தீ விபத்து

image

ஈரோடு பெரிய வலசு – கொங்குநகர் பகுதியில் பொன்னுசாமி (60) என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த தறிப்பட்டறை தொழிலாளர்கள், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். பின் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

error: Content is protected !!