Erode

News March 9, 2025

புளியம்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி

image

சத்தத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செம்படா பாளையத்தை சேர்ந்த ரமேஷ், உன்னம்மாள் ஆகியோர் புளியம்பட்டியில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற லாரி புளியம்பட்டி நல்லூர் அருகே மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் உயிர் இழந்து விட்டனர். உடல்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துபோலீசார் விசாரணை செய்கின்றனர்.

News March 9, 2025

ஈரோட்டில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு

image

நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து, பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாக ஈரநில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் காலை 6.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நீர் நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

News March 9, 2025

ஈரோட்டில் நேற்று 101 டிகிரி வெயில்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 100 டிகிரி மற்றும் அதனை கடந்து வெயில் வாட்டுகிறது. நேற்று, 38.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டியது. இது, 101 டிகிரி பாரன்ஹீட் முதல் 101.8 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெப்பம் உணரப்பட்டது.குறிப்பாக காற்றில் ஈரப்பதம் இன்றி வெப்பமான நிலையே நீடித்தது. மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது.

News March 9, 2025

ஈரோட்டில் உள்ள கோவில்கள்

image

ஈரோட்டில் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் ▶திண்டல்மலை முருகன் கோயில். ▶பவானி சங்கமேஸ்வரர் கோயில். ▶பண்ணாரி மாரியம்மன் கோயில். ▶பெரிய மாரியம்மன் கோயில். ▶சென்னிமலை முருகன் கோயில். ▶கொடுமுடி அம்மன் கோயில் ஆகிய கோவில்கள் உள்ளன. ஈரோடு மக்களே உங்க ஊர் கோவில், குலதெய்வ கோவில்களை கீழே கமெண்ட் பண்ணுங்க. ▶உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க

News March 9, 2025

“நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு”

image

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 10,552 பேருக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின் செய்தியாளர்கள் கேள்விக்கு, நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஏற்பாடு செய்வார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆடுகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்றார். 

News March 9, 2025

ஈரோடுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஈரோடு, காஞ்சி, சிவகங்கை, தேனி, கரூர், நாகை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும் என்றார். இது ஈரோடு பெண்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றுள்ளது. ( Share பண்ணுங்க)

News March 8, 2025

காட்டுபன்றி குறுக்கே வந்தால் இளைஞர் படுகாயம்

image

கர்நாடக மாநிலம் பந்தேகவுடநல்லி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இவர் இரவு தாளவாடி பனக்கள்ளி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் பந்தேகவுடநல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எரகனள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது காட்டு பன்றி குறுக்கே வாகனத்தில் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து சந்துரு பலத்த காயம் அடைந்தார்.

News March 8, 2025

கோபி அருகே கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ஈரோடு: கோபி அருகே தாசம்பாளையத்தில் சாலையோரம் நின்ற பேருந்து மீது கார் மோதியதில், காரை ஒட்டிச் சென்ற கண்ணுச்சாமி (58) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தனது மாமனாரை வீட்டில் விட்டுவிட்டு பொலவக்காளிபாளையம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட காரை, ஜேசிபி கொண்டு வெளியே எடுத்து உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டது.

News March 8, 2025

WOMEN’S DAY SPECIAL: ஈரோடு ஆராயம்மாள்

image

இன்று உலக மகளிர் தின(மார்ச்.8). சென்னிமலையை சேர்ந்த ஆராயம்மாள் 74 வயதிலும் ஓயாத உழைக்கும் பெண்மணி. ஆராயம்மாள். 38 ஆண்டுகளாக கைத்தறிக்கு நூல் நோற்கும் பணியில் ஆராயாம்மாள் ஈடுபட்டு வருகிறார். உழைப்பு ஒன்று உயர்வு தரும் என்றவர் உடல் ஒத்துழைக்கும் வரை உழைப்பேன் என உற்சாகமாகச் சொல்கிறார் ஆராயாம்மாள். பெண்மையை போற்றுவோம்.  இந்த WOMEN’S DAY-க்கு  சிங்கப்பெண் இவர் தான். (Share பண்ணுங்க)

News March 8, 2025

WOMEN’S DAY SPECIAL: ஈரோடு ஆராயம்மாள்

image

இன்று உலக மகளிர் தின(மார்ச்.8). சென்னிமலையை சேர்ந்த ஆராயம்மாள் 74 வயதிலும் ஓயாத உழைக்கும் பெண்மணி. ஆராயம்மாள். 38 ஆண்டுகளாக கைத்தறிக்கு நூல் நோற்கும் பணியில் ஆராயாம்மாள் ஈடுபட்டு வருகிறார். உழைப்பு ஒன்று உயர்வு தரும் என்றவர் உடல் ஒத்துழைக்கும் வரை உழைப்பேன் என உற்சாகமாகச் சொல்கிறார் ஆராயாம்மாள். பெண்மையை போற்றுவோம்.  இந்த WOMEN’S DAY-க்கு  சிங்கப்பெண் இவர் தான். (Share பண்ணுங்க)

error: Content is protected !!