India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர், திங்களூர் ,கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் இந்த மின்தடையால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிபட்டு வருகின்றனர். இதையடுத்து துண்டிக்கப்பட்ட மின்கம்பியை விரைந்து சீர்செய்து மின்சாரம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் ஈரோடு மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மே 1ஆம் தேதி 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் மே 2இல் அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், நேற்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இன்று அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் நேற்று அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், இன்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. நாளை அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் நாளுக்கு நாள் 100 டிகிரி தாண்டி பொதுமக்களை வாட்டி வருகிறது. இந்த தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் அனுதினமும் நுங்கு இளநீர்,மோர், தயிர் போன்றவர்களை பயன்படுத்தி தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருநகர் காலனி பகுதியில் மோட்டார் மெக்கானிக் எதிர் எதிரே மின்விசிறி வைத்து தாகத்தை குறைக்கின்ற காட்சி வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 9498168363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 8072628234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 9498175888 ஆகிய எண்ணில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான தகவல் தெரிவிக்கலாம்.
ஈரோடு, அம்மாபேட்டை பகுதியில் பாலமலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டம், மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்டது. இந்நிலையில், இம்மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சித்தரை மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.எனவே மலை ஏறும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, மது அருந்தவோ, புகை பிடிக்கவோ, குப்பைகளை போடவோ கூடாது என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகர் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 46 கடைகள் உள்ளன. இதில் 39 கடை ஒப்பந்ததாரர்கள் ரூ.4 கோடியே 70 லட்சம் வாடகை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளனர். எனவே கடந்த 3 மாதமாக வாடகை நிலுவை தொகை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.