India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவானி சாகர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கோடம்பாளையத்தில் சாலையில் உறங்கியவர் மீது மோதாமல் இருக்க காரை திரும்பிய போது விபத்து நேரிட்டது. கர்நாடக மாநிலம் பி.ஜி. பாளையத்தை சேர்ந்த மைக்கேல் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலத்தில் இன்று மக்கள் குரைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனு பெற்று, குறைகள் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
ஈரோட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தில் வெயில் அதிகமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும், குளிர்ந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ஆவின் பாலகம் அமைத்திட ரூ.50,000/- ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்.
ஈரோட்டில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.<
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு மாமியாருக்கு பிடித்த உணவை மருமகள் ஆர்டர் செய்ய வேண்டும், மருமகளுக்கு பிடித்த உணவை மாமியார் ஆர்டர் செய்து ஊட்டி விட வேண்டும் என்ற புதுவகை விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான மாமியார் – மருமகள்கள் கலந்து கொண்டு உணவை ஊட்டி விட்டு அன்பை பகிர்ந்து கொண்டனர்.
ஈரோட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தில் வெயில் அதிகமான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரத்தில் வெயிலில் நடமாட வேண்டாம் என்றும், குளிர்ந்த ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி (ம) உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் ஈரோடு, திருப்பூர் அபார வளர்ச்சி பெற்றது. கோவிட் காலத்தில் கேரளாவில் சிறிய யூனிட் துவங்கி ஆடையாக வடிவமைத்து உள்ளுர் சந்தையில், பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை ரூ.25-க்கு விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், அங்கு விற்பனை சூடுபிடித்து கேரள மார்க்கெட் தொடர்பு ஈரோடு, திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ரங்கம்பாளையத்தில் மார்ச் 15ஆம் தேதி நடைபெறுகிறது. 200 மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 10,000 மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். (Share பண்ணுங்க)
சென்னிமலை டவுன், ஒன்பதாவது வார்டு பார்க் சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு பின்புறம் காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்தெறிந்தது. இதுகுறித்து உடனடியாக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சுரேகா ராஜ்குமார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். மொடக்குறிச்சியில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
Sorry, no posts matched your criteria.