India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அந்தியூரில் பழமைவாய்ந்த மலைக்கருப்பசாமி கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைதியான சூழலில் அமர்ந்திருக்கும், மலைக்கருப்பசாமி, ஒரு சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். அனைத்துவித தடைகளையும் போக்கும் வல்லமை கொண்ட கருப்பசாமியை, வீரப்பன் அவ்வப்போது வந்து வணங்கி செல்வாராம். இங்கு பூஜை முடிந்து வழங்கப்படும் மூலிலைச்சாறை பெற மக்கள் அலைமோதுவார்களாம். இது பலவகை வியாதிகளை தீர்க்கும் என நம்பப்படுகிறது.
ஈரோடு, பவானியில் ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது மயங்கி விழுந்த யுவனேந்தல், சந்திவேல் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் செல்லப்பன் என்பவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெருந்துறை புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினசரி 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.
ஈரோடு, அம்மாபேட்டை அருகே உள்ள கோண மூக்கனூர், இந்திரா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரவேஷ் (12). இவர் அப்பகுதியில் உள்ள நீர் குட்டையில், தனது நண்பர்களும் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல், ஆழமான பகுதியில் சென்றதால், மாணவன் ரமேஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாம்பல்பூர் – ஈரோடு சிறப்பு இரயில், புதன் காலை 11:35க்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியே மறுநாள் இரவு 8:30க்கு ஈரோடு வந்து சேரும். இந்த இரயிலில், ஏப்.,2 முதல் 30 வரை கூடுதலாக, 3ம் வகுப்பு ஏசி, ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மறுமார்க்க இரயிலில், ஏப்., 4 முதல் மே 2 வரை, அதேபோல் இரு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாரியம்மன் கோயில் – பண்ணாரி. பத்ரகாளியம்மன் கோயில் – அந்தியூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பாரியூர். அழகுநாச்சியம்மன் கோயில் அஞ்சூர். மாகாளியம்மன் கோயில் – கருங்கல்பாளையம். எல்லையம்மன் கோயில் – பர்கூர். கரியகாளியம்மன்கோயில் – பிச்சரமல்லனூர். செல்லாண்டியம்மன் கோயில் அவல்பூந்துறை. பகவதியம்மன் கோயில் – கோபி. பெரியநாயகியம்மன் கோவில் – சுண்டக்காம்பாளையம்.இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
ஈரோடு தலைமை அஞ்சலகங்களில்பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறுசேமிப்பு திட்டம் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2024-25 வங்கி சேவை மற்றும் ஐபிபிபீஸ்வைப் சேவைகளும்மேற்கண்ட 2 நாட்களில்இயங்காது. மேலும், நிதியாண்டின் இறுதி நாளான 31ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் அதையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை என ஈரோடு முதுநிலை கோட்ட ஆய்வாளர் கோபாலன் தெரிவித்தார்.
ஈரோட்டில் மிகவும் புகழ்பெற்ற கோவிலில் பண்ணாரியம்மன் கோவில் முக்கியமானது. இங்கு அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை கண்டறிந்தவர்கள் உடனே குணமடைகிறார்கள். இந்த அமாவாசையை முன்னிட்டு இங்கு சென்று தரிசனம் செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
தமிழகத்தில் மே மாதம் காலியாக உள்ள உள்ளாட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தேசித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர் 17வது வார்டு, பவானிசாகர் 11வது வார்டு, சென்னசமுத்திரம் 7வது வார்டு, கருமாண்டிசெல்லிபாளையம் 2வது வார்டு, கிளாம்பாடி 10வது வார்டு, கூகலூர் 3 & 5வது வார்டு, பள்ளபாளையம் 11வது வார்டு, வாணிபுத்தூர் 4வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.