Erode

News March 12, 2025

ஈரோடு-திருச்சி இரயில் சேவையில் மாற்றம்

image

திருச்சி கோட்டை-திருச்சி ஜங்ஷன் இரயில்வே நிலையத்திற்கு இடையே தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் இரயில் எண்.56106 ஈரோடு-திருச்சி பயணிகள் இரயில், மார்ச் 18ஆம் தேதி கரூர் இரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த இரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படாது.

News March 12, 2025

குட்கா விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள கடைகளில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், போலீசார் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 12, 2025

ஈரோடு: புரோட்டா லேட் ஆனதால் சப்ளையருக்கு கத்திக்குத்து 

image

கொடுமுடி அஞ்சூரைச் சேர்ந்த பூமிநாதன் (57) சப்ளையராக வேலை செய்து வருகிறாா். முத்தூா் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பந்தல் வேலை செய்யும் முருகேசன் (45) நேற்று இரவு ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளாா். அவா் கேட்ட புரோட்டா லேட் ஆனதால், சப்ளையர் பூமிநாதனுடன் சண்டை போட அப்போது தான் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News March 12, 2025

ஈரோட்டில் மழை! ஸ்தம்பித்தது

image

வழிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர்- பவானி சாலையில் பெரிய புளியமரம் வேருடன் பெயர்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது. ( Share பண்ணுங்க)

News March 11, 2025

ஈரோட்டில் மாபெரும் வேலைவய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மார்ச் 15 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பங்குபெற படத்தில் உள்ள QR – யை ஸ்கேன் செய்து கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும்.

News March 11, 2025

ஈரோடு: மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு, ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை 12ம் தேதி காலை 11 மணி அளவில் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. ஈரோட்டில் உள்ள மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டார்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்

News March 11, 2025

ஈரோடு: அரசு மருத்துவமனியில் சிறப்பு சிகிச்சை வார்டு

image

ஈரோடு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைக்கான வார்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஈரோட்டில் தினமும் 100*சி வெப்பம் பதிவாகுவதாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்ய்ப்பட்டதாக மருத்துவ அதிகாரி சசிரேகா கூறினார். 24 மணி நேரமும் இந்த வார்டில் இரண்டு டாக்டர் மற்றும் செவிலியர் பணியில் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிவித்தார். தரை தளத்தில் இந்த வெப்ப அலை வார்டு இயங்கும் என தெரிவித்தார்.

News March 11, 2025

ஈரோடு: வார்டு வாரியாக சிறப்பு முகாம்

image

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி, உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச் 31குல் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கிவருகின்றனர். 60 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பில் கலெக்டர்கள், ஊழியர்கள் வரி வசூல் செய்துவருகின்றனர்.

News March 11, 2025

இன்று கடைசி நாள்!

image

ஈரோட்டில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். ஊதியம் ரூ.20,000. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் 11.3.25 ஆகும்.

News March 11, 2025

ஹோலி பண்டிகை: மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை

image

ஈரோடு என்றாலே மஞ்சள் வர்த்தகத்திற்கு புகழ் பெற்றது. இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் 14.ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது: மார்ச்14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. Share பண்ணுங்க

error: Content is protected !!