India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது பைக்கில் ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தபால் அலுவலகம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் லாரி பரமேஸ்வரன் பைக் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண மாணவர்களுக்கு வளாக தேர்வு நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். அவற்றில் 329 மாணவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி நியமன ஆணையை வழங்கினார்.
கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமுர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு மக்களவை தேர்தலில் திமுகவே நேரடியாக களமிறங்கவுள்ளது. இந்த முறை ஈரோடு தொகுதியில் பிரகாஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தியூர் அருகே புதுப்பாளையம் படவே காட்டூர் பகுதியில் தேர்தல் அதிகாரி முத்து மற்றும் போக்குவரத்து போலீசார் மாதேஸ்வரன் கொண்ட குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பூலாம்பட்டியை சேர்ந்த ராஜா(22) என்பவர் தனது லாரியில் ரூபாய் 1,02,750 எடுத்து சென்றார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 2,000 டன் நெல், தனி சரக்கு இரயிலில், நேற்று ஈரோடு வந்தது. இதனை நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் இவை அரைக்கப்பட்டு புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராமம் – தம்முரெட்டியை சேர்ந்த தம்பதி முருகேஷ் – சிந்து (22). நிறைமாத கர்ப்பிணியான சிந்துவிற்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட 108 ஆம்புலன்ஸ் மூலம் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது. பின் 108 வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புனர் சிந்துவிற்கு பிரசவம் பார்த்தார். இதில்
சிந்துவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,55,717 பேர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2,30,470 பேர், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,773 பேர், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,966 பேர், தாராபுரம் தொகுதியில் 2,58,819 பேர், காங்கயம் தொகுதியில் 2,59,681 பேர் என மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா்.
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு, இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.