Erode

News March 14, 2025

சாலைமறியல் பவானி எம்.எல்.ஏ. சமாதானம்

image

கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூரில் உள்ள கார்த்தி என்பவரது தோட்டத்தில், நேற்று ஒன்பது ஆடுகளைக் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து கொன்றது. பாதிப்பை தடுக்க வலியுறுத்தி நேற்று மக்கள் ஆடுகளுடன் சாலைமறியல் செய்தனர். நிகழ்விடத்திற்கு வந்த பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.

News March 14, 2025

ஈரோட்டில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு

image

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 15 ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 13, 2025

ஈரோடு அருகே பெண் தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கூத்தம்பட்டி ஜேஜே நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி மாரியம்மாள் 52. கோவிந்தசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு, மாரியம்மாள் கவலையுடன் காணப்பட்டார். இந்நிலையில் துயரம் தாங்காமல்,  மாரியம்மாள் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அரச்சலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2025

திருமண தடையை தீர்க்கும் திண்டல் முருகன்

image

ஈரோடு திண்டல் மலையில் புகழ்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாட பெற்ற 178 தலங்களில் இக்கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் பிரதி வார செவ்வாய் அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துக்கோண்டு முருகனை வழிப்பட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, செவ்வாய் தோஷம் தொழில் பிரச்சனை என தீராத வினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வின் சகலுமும் கை கூடி அடுத்த நிலைக்கு செல்லலாமென கூறப்படுகிறது.

News March 13, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஈரோடு பேருந்து நிலையத்தில், மார்ச் 15,16 ஆகிய இரு தேதிகளில் இயற்கை சந்தை நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம், மகளிர் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டு உள்ளார்.

News March 13, 2025

ஈரோடு: E-KYC பரிவர்த்தனை

image

ஈரோடு, அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e-KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

News March 13, 2025

புதிய வழித்தடத்தில் மினி பஸ்: விண்ணப்பிக்க அழைப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே பெருந்துறை, கோபி, சத்தி, கொடுமுடி, சிவகிரி, நம்பியூர், சத்தியமங்கலம், கடம்பூர், பவானி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வழித்தடத்தில் மினிபஸ்கள் இயக்கப்பட உள்ளது. புதிய வழித்தடத்துக்கு அனுமதி கோரி விரும்புவோர் அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அணுகி உரிய ஆவணங்களை சமர்பித்து மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.

News March 13, 2025

“வரி செலுத்த தவறினால் குடிநீர் கட்”

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து நிலுவை, நடப்பாண்டு வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுமக்களும் வரும் 31க்குள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை, தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. Share பண்ணுங்க

News March 12, 2025

பவானி: சங்கமேஸ்வரர் கோயில்!

image

ஈரோடு, பவானி கூடுதுறையில், புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. தமிழகத்தில் சிறந்த பரிகார தலங்களில் இதுவும் ஒன்று. கூடுதுறையில் நீராடி, சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும், சங்கமேஸ்வரரை வணங்கினால், சகல தோஷங்களும் நீங்குமாம். 1804 ஆம் ஆண்டில், கோவை ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ, ஆபத்து வேளையில், தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோயில் அம்மனுக்குக் காணிக்கையாக, கட்டில் ஒன்றை வழங்கியுள்ளாராம்.

News March 12, 2025

காந்தி சிலைக்கு அமைச்சர் மரியாதை 

image

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் முழு உருவச்சிலை புனரமைக்கப்பட்டு நூலகமாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தியடிகளின் சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!