Erode

News March 20, 2024

தேர்தல்: ஈரோடு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா உள்ளவர்கள் வீடுகளுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மார்ச் 24ஆம் தேதிக்குள் நேரில் சென்று படிவம் 12டி வழங்க உள்ளனர். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News March 20, 2024

ஈரோட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

image

ஈரோட்டில், காந்திஜி ரோட்டில் பிரபு என்பவருக்கு சொந்தமான பார்வதி பண்ணை முட்டை கடை உள்ளது. நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் பிரபு கடையை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.9,000 பணம் திருட்டு போனது தெரிந்தது. எனவே பிரபு அளித்த தகவலின்படி ஈரோடு – சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 20, 2024

உரிமம் பெற்ற 68 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய பகுதிகளில் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் அம்மாபேட்டையை சுற்றி உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருந்த 68 பேர் அம்மாபேட்டை காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

News March 20, 2024

தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

ஈரோடு: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி ஈரோடு தொகுதியில் வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

image

ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மார்ச் நடைபெற உள்ளது. எனவே மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

ஈரோட்டில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News March 19, 2024

ஈரோடு: 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா மார்ச் 25,26 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி மார்ச் 25ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மார்ச் 26ஆம் தேதி இரவு 9 வரை பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வாகனங்களும், மாற்று பாதையில் செல்ல ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!