Erode

News March 26, 2024

ஈரோட்டில் தபால் வாக்குப்பதிவு படிவம் அனுப்பும் பணி

image

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் பிற மாவட்டத்தில் வாக்கு உரிமை உடைய போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் வாக்குப்பதிவு செய்யும் படிவம் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் தபால் வாக்குச்சீட்டு படிவம் வழங்கப்பட உள்ளது.

News March 26, 2024

ஈரோட்டில் 10 கைத்தறி பூங்காக்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

அதிமுக வேட்பாளருக்கு ரூ. 648 கோடி சொத்து மதிப்பு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆற்றல் அஷோக் குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் ரூ.583 கோடியும், தனது மனைவி பெயரில் ரூ. 65 கோடி என மொத்தம் ரூ648 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார்.

News March 26, 2024

வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

image

ஈரோடு அடுத்த அக்ரஹாரம் இந்தியா டையிங் மில் கூட்ட அரங்கில் நாளை (மார்ச்.27) ‘நிதி ஆப்கே நிகட் ‘ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

ஈரோடு மாவட்டத்தில் இன்று 166 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச்.26) துவங்கி, ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 25,663 பேரும், தனி தேர்வர்கள் 1,159 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 25, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை 166 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26ம் தேதி) துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 25,663 பேரும், தனி தேர்வர்கள் 1,159 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு எழுத 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 25, 2024

சத்தியமங்கலத்தில் பறந்த ராட்சத பலூன்

image

ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் தாலுகா அலுவலக மாடியில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதி தேர்தல் அலுவலர் உமாசங்கர், தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News March 25, 2024

ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு   தீவிர சிகிச்சை

image

ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி கணேசமூர்த்தி(77) பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

News March 25, 2024

செல்போனை பார்த்தால் போதும்

image

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை நடைபெறுவதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை கூகுள் மேப் உதவியுடன் கண்டறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வாகன நிற்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கோயில் நிர்வாகத்தின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

News March 25, 2024

ஈரோடு : பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார்

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். எனவே ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 120 கண்காணிப்பு கேமரா போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!