India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, கோபியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் முகநூலில் மதங்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் விதமாக பொய்யான வதந்திகளை பதிவிட்டு மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இது போன்று சமூக ஊடகங்களில் மத கலவரத்தையும், ஜாதி கலவரத்தையும் தூண்டும் உள்நோக்கத்துடன் பொய்யான வதந்திகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
பவானியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி கரையோரப் பகுதியில் உடல் முழுவதும் கருங்கல்லை கட்டிய நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீாசர், இதுகுறித்து விசாரணை செய்ததில் இறந்தவர் மதியழகன் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மார்ச்.15ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8, 10, 12, டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் Share பண்ணுங்க
தமிழக பட்ஜெட்டில் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் புதிதாக தொழில் தொடங்குவோர் மாற்றும் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கியம் பறவைகள் சரணாலயங்களில் ஈரோடு, வெள்ளோடு பறைவகள் சரணாலமும் ஒன்று. 200 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு, பொலிகான், கொசு உள்ளான் உட்பட 100க்கு மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளது. இப்பறவைகள் புலம் பெயர் மற்றும் புலம் பெயர எனும் இரண்டு வகைகளில் சேரும். சுற்றுலா வாசிகளுக்கு வசிதியாக உயர் கோபுரம் போன்ற பல வசதிகள் உள்ளது. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு பார்வையிட சிறந்த காலம்.
ஈரோடு: கரூரில் தொழிலாளியாக வேலை செய்த ஒடிசாவைச் சேர்ந்த தண்டபாணி ஷபார் (30) என்பவரிடம் ஈரோடு ரயில் நிலையத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் அவரைக் கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கொலையாளியான அசாமைச் சேர்ந்த ராகுல் (24) என்பவர் தற்போது கைதாகியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க புதிய வழிதடங்கள் கண்டறியப்பட்டு அரசு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு , பெருந்துறை, கோபியி, சத்தியமங்கலம், பவானியி ஆகிய பகுதிகளில் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வட்டார போக்குவரத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ’வ பரிவேகன்’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(மார்ச் 15) கடைசி நாள்.
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ ஈரோட்டில் புதிதாக அன்புச் சோலை மையங்கல்.
▶ ஈரோட்டில் ரூ.22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம்.
▶ ஈரோட்டில் தோழி விடுதிகள்.
▶ ஈரோடு- சத்தியமங்கல், தாளவாடி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்வு.
ஈரோடு பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்தனர். இந்திரா நகர், வளையக்காரவீதி போன்ற இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண் அடுக்குத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அரசு துறை சார்ந்த அனைத்து மானிய திட்டங்கள், பிஎம் கிஷான் வருடம் 6000 பெரும் திட்டம் இதன் மூலம் மட்டுமே செயல் படுத்தப்படும். எனவே அருகே உள்ள பொது சேவை மையங்களை CSC அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.