India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தியமங்கலம் பண்ணாரி சரகத்தில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு பெண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக கீழே படுத்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த பெண் யானை அருகே சுமார் 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று சுற்றி சுற்றி வந்து பிளரி கொண்டிருந்தது.
இதைப்பார்த்த வனத்துறையினர் கண் கலங்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்கள் புகார்களை 99943 80605 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் உக்கிரன் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் இருந்து குச்சி கிழங்குகளோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் மல்லூருக்கு சென்றது. அத்தியப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியின் பயணித்த 7 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கொடுமுடி அருகே தளுவம்பாளையம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே அழுகிய நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக நேற்று கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இறந்த நபர் குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபி சட்டமன்ற தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் 860 பேருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதில் 827 பேர் ஓட்டு பதிவு செய்தனர். 22 பேர் வெளியூர் மற்றும் சிகிச்சைக்கு சென்று விட்டனர். மற்ற 11 பேர் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதிக்குள் வயது முதிர்வால் இறந்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாளவாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாளவாடி மரூர் குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மகேந்திரா(26), மாதவசாமி (46), நாகராஜப்பா(35), குருசித்தச்சாரை, வசந்த்(24), மாதப்பா(54), சங்கரப்பா (64) உள்ளிட்ட 39 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், சென்னம்பட்டி ஆகிய பகுதிகளில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். இதில் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாநகர் மட்டுமின்றி புறநகர், சிப்காட் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், 19ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், ஜனநாயக கடமை ஆற்ற தங்களது சொந்த ஊருக்கு செல்ல, ஈரோடு இரயில் நிலையத்தில் இன்று குவிந்தனர்.
ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாநகர், சூரம்பட்டி பேருந்து நிறுத்தம், பாரதிபுரம், வ. ஊ.சி வீதி, அண்ணா வீதி,திரு. வி. க வீதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் தீவரமாக வாக்கு சேகரித்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தனர்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் சோதனை சாவடி பகுதிகளில் நிலையான கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80,000, பாரியூர் தொட்டிபாளையம் பிரிவு அருகில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.57,000 பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.