India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச்.20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதன்படி ஈரோடு தொகுதியில் வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மார்ச் நடைபெற உள்ளது. எனவே மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா மார்ச் 25,26 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி மார்ச் 25ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மார்ச் 26ஆம் தேதி இரவு 9 வரை பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வாகனங்களும், மாற்று பாதையில் செல்ல ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குட்டை மேடு பகுதியில் இன்று காலை தமிழக அரசு அனுமதியின்றி 58 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த அம்மாவாசை என்பவரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 58 மதுபாட்டில் மற்றும் விற்பனை செய்த தொகை ரூ. 7 ஆயிரத்து 80 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது பைக்கில் ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தபால் அலுவலகம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் லாரி பரமேஸ்வரன் பைக் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண மாணவர்களுக்கு வளாக தேர்வு நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். அவற்றில் 329 மாணவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி நியமன ஆணையை வழங்கினார்.
கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.