India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வன துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் முடிந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஈரோடு வன சரக ஊழியர்கள், தன்னர்வலர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 5 வன சரகங்களில் 29 இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வெள்ளோடு, கனகபுரம், அரச்சலூர்,பர்கூர்,அந்தியூர், சென்னம்பட்டி இதில் மொத்தம் 29 இடங்களில் நில வாழ் பறவைகள் கண்டறிய பட்டுள்ளன.
ஈரோட்டைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிச்செல்லி. இவர்களது குழந்தை கடந்த 15ம் தேதி பேச்சு, மூச்சின்றி திடீரென மயங்கி விட்டது. மருத்துவமனையில் சேர்த்ததில், குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாண்டிசெல்வி புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் குழந்தையை கொன்றது குமார் என தெரிந்தது. குழந்தை என் ஜாடையில் இல்லை என கொன்றதாக குமார் வாக்குமூலம் அளித்தார்.
ஈரோட்டில் நாளை(மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை நீங்கலாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் பெற்று பயனடையுமாறு கேட்டுகொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கோழிப்பாளையத்தில் நேற்று இரவு மைசூரில் இருந்து திருமண விழாவிற்காக 5 பேர் காரில் வந்திருந்தனர். திருமண விழாவில் இருந்து தேநீர் அருந்துவதற்காக புழிஞ்சூர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 3 பேர் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நிலுவை மற்றும் நடப்பாண்டு வரி இனம் மற்றும் தொழில் உரிம கட்டணத்தை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும். இதனை ஊராட்சி அலுவலகம், வரி வசூல் முகாம்கள், https://vptax.tnrd.gov.in என்ற போர்டல் மூலம் வரி செலுத்தி ரசீது பெறலாம். வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை மற்றும் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுமென கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், விதை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். மொத்தம் 24 விதை விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து ரூ.20,85,970 மதிப்பிலான 44,320 கிலோ விதையை, விற்பனை செய்ய தடை விதித்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில். திண்டல்மலை வேலாயுதசாமி கோயில். சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோயில். சென்னிமலை முருகன் கோயில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில். அந்தியூர் பத்ரகாளியம்மன்கோயில். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். தவளகிரி முருகன் கோயில். பச்சமலை முருகன் கோயில். பவளமலை முருகன் கோயில். அந்தியூர் மலைக்கருப்பசாமி கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.
சித்தோட்டில் கடந்த மாதம், மத்திய அரசின் சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1,85,020 கிலோ யூரியா, 5 லாரிகளை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைதான பவானியைச் சேர்ந்த அகமது அலியை, குண்டர் சட்டத்தில் கைது செய்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது. மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட, 1,30,956 குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் திரவம் வழங்கப்படுகிறது. நாளை தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. வைட்டமின் ஏ திரவம், குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
Sorry, no posts matched your criteria.