Erode

News April 18, 2024

தாளவாடி: 5 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

image

தாளவாடி பகுதியில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால்,  தாளவாடி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 18, 2024

ஈரோடு தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

ஈரோடு: விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க தேர்தல் ஆணையத்தால்உத்தரவிடப்பட்டுள்ளது . மேலும் பொது விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

நாளை இலவசப் பேருந்து 

image

மக்களவைத் தேர்தல் நாளை 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் (ம) மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து செல்லலாம். 

News April 18, 2024

லாரி கவிழ்ந்து விபத்து

image

ஈரோடு, தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் இன்று காலை ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 18, 2024

ஈரோட்டில் வெளுத்து வாங்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று 106.52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 18, 2024

தமிழக – கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை

image

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.

News April 17, 2024

தமிழக – கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை

image

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.

News April 17, 2024

ஈரோடு வெப்பநிலை விவரம்

image

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன் படி, ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

News April 17, 2024

விடுதியில் தாய், குழந்தை தற்கொலை

image

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் விடுதியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகிலவாணி (25) மற்றும் அவரது 3 வயது மகள் கடந்த 13 ஆம் தேதி தங்கியுள்ளனர்.  2 நாட்களாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் விடுதியாளர் பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின் அறையின் கதவை உடைத்து பார்த்த போது கோகிலவாணி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!