India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து கட்டணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9487247205, 0424-2294365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தோடு அடுத்த நரிப்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நரிப்பள்ளம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் மே 12ஆம் தேதி அக்னி நட்சத்திர மஹா அபிஷேக விழா நடைபெற உள்ளது. முன்னதாக 11ஆம் தேதி சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து புனித தீர்த்தம் குடம் புறப்படுகிறது. பின்னர் மே 12 ஆம் தேதி அக்னி நட்சத்திர விழா நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி ரஞ்சிதா,மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகியோருடன் கரூர் சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் சிறுமுகை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சத்தியமங்கலம் அடுத்த நெசவாளர் காலனி அருகே வந்த போது சத்தியமங்கலம் நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் முருகன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்தியூர் வட்டம், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவர் சரவணன் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2,500 மரங்களை நட்டு கிராமம் முழுவதும் பராமரித்து வருகிறார். கடுமையான கோடைகாலத்தில் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் , பசுமையாகவும் காட்சியளிக்கிறது. மைக்கேல்பாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவரை வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மே தினத்தை (மே 1))
முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் நாளை அரசு மதுபான கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்படும். மேலும், அன்றைய நாளை மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சோலார் அருகில் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் மூழ்கிய சின்னம்பாளையத்தை சேர்ந்த சிறுவர்கள் தபீஸ், மெளனீஸ் ஆகியோரது உடல்களை மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.
அந்தியூர் தேவர் மலைப்பகுதியை சேர்ந்தவர் சாக்சி (35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று பிரசவவலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு அதிக வலி ஏற்பட்டது. பின்னர், நடுக்கத்தில் நிறுத்தப்பட்டு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இன்று நம்மை சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். என்று பவானி பூங்கா மற்றும் பவானியில் பறவைகள் நிறைந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளையும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.