Erode

News April 25, 2024

கடம்பூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

image

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடம்பூர் அடுத்த சின்னசாலப்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவருடன் அவர்களுக்கு பழக்கம் இருந்ததுள்ளது. இதனையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 வது நாளாக குப்புசாமியிடம் இன்றும் விசாரித்து வருகின்றனர்.

News April 25, 2024

ஈரோடு அருகே விபத்து

image

ஈரோடு, பங்களாப்புதூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் திருவிழாவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அஜித்குமார் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால், கோபிநாத், சரவணன் அமர்ந்து இருந்தனர். அப்போது சத்தி – அத்தாணி சாலையில் பயாட்டிக் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அஜித் உயிரிழந்தார்.

News April 25, 2024

தர்பூசணி விற்பனை ஜோர்

image

ஈரோட்டில், கோடை காலம் தொடங்கும் முன்பே 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக 109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. எனவே வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் தர்பூசணி விற்பனை தொடங்கி உள்ளது. ஈரோட்டில் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், சோலார், திண்டல், க.குளம், சி.என்.கல்லூரி, சூளை, லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தற்காலிக தர்பூசணி கடை அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

News April 25, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

தீர்த்தக்குடம் ரூ.4.17 லட்சத்திற்கு ஏலம்

image

அந்தியூர் அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோவிலில் குண்டம் விழா நேற்று விமர்சையாக நடந்தது. இதில் ஒரு தீர்த்தக்குடம் ஏலம் விடப்பட்டது. இதனை பக்தர்கள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். இதில் தீர்த்தக்குடம் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மேலும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தீர்த்த தண்ணீரில் விளக்கு எரிய வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

ஈரோட்டில் தீவிர சோதனை 

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தி அடுத்துள்ள தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 25, 2024

பறவை காய்ச்சல் கண்காணிப்பு தீவிரம்

image

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால், தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் மூலம் அனைத்து கோழி பண்ணைகள், புறக்கடை,கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் கைது

image

கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். தொடர்ந்து கடன் தொகையை அவர்கள் செலுத்தி வந்த நிலையில் சில தவணைகள் செலுத்தவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்ட வழக்கறிஞர் சென்னியப்பன் என்பவரையும் நிதி நிறுவனத்தினர் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து கார்த்திக், நடராஜனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

News April 25, 2024

பழமை வாய்ந்த திண்டல் முருகன் கோவில்

image

திண்டல் முருகன் கோவில், ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 60 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. கொங்கு நாட்டு ஆலய அமைப்பில், தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

News April 25, 2024

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வழிபாடு

image

மழை பெய்து வெப்பம் தணிவதற்காகவும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், நாடு செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் சிவாச்சாரியார்கள்,வருணபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தனர். பிறகு காவிரி ஆற்றில் ஒரு மணி நேரம் சிவாச்சாரியார்கள் இறங்கி ஜெபித்தனர்.

error: Content is protected !!