Erode

News April 27, 2024

சிவகிரி சந்தையில் எம்எல்ஏ ஆய்வு

image

சிவகிரி பேரூராட்சி வார சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடைகளில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் தங்களின் வியாபாரத்திற்கு தகுந்தவாறு இடம் ஒதுக்கப்படவில்லை என வியாபாரிகள் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதியிடம் கோரிக்கை வைத்தார். இன்று அவர் சந்தை பகுதிக்கு சென்று பார்வையிட்டு வியாபாரிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

News April 26, 2024

ஈரோடு: 72 செல்போன்கள் ஒப்படைப்பு

image

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் காணாமல் போய் விட்டதாக கூறி புகார் கொடுத்து இருந்தனர். உடனடியாக சைபர்கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.11,10,544 மதிப்பிலான 72 செல்போன்கள், கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதன் உரிமையாளர்களிடம், ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜவகர் இன்று வழங்கினார்.

News April 26, 2024

ஈரோடு: கோடைகால நீச்சல் பயிற்சி

image

ஈரோடு வஉசி விளையாட்டு மைதான வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நீச்சல் குளம் உள்ளது. நடப்பாண்டில் 3ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மேலும் தகவலுக்கு 0424-2223157 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

ஈரோடு நேற்றைய வெப்பநிலை விவரம்

image

ஈரோட்டில் நேற்று (ஏப்.25) 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

ஈரோடு: தந்தத்திற்காக யானை வேட்டையா ?

image

தாளவாடி அடுத்த கும்டாபுரம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண் யானை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து யானையின் உடல் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் தந்தங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனால் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டதா?அல்லது வேறு காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2024

 கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

image

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம், வ.உ.சி பூங்கா மைதானத்தில் வருகிற 29ம் தேதி தொடங்கி, மே 13 வரை, 15 நாட்கள் நடக்கிறது. சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ரூ.200 சந்தா செலுத்த வேண்டும்.

News April 26, 2024

திண்டல் முருகன் கோவிலில் ராஜகோபுரம் 

image

ஈரோடு, திண்டல் மலையில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி, ராஜகோபுரம் அமைக்கும் பணியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மதிப்பு ரூ.2.11 கோடி ஆகும். இந்நிலையில், 5 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.

News April 26, 2024

ரயில் நிலையம் அருகே ஆண்

image

ஈரோடு இரயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2024

மாநில எல்லை சோதனைச் சாவடியில் ஆய்வு

image

கர்நாடக மாநிலத்தில் முதல் கட்டமாக இன்று ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் இரண்டாம் கட்டமாக மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம், பர்கூர் பகுதியில் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தட்டக்கரை வன அலுவலகம் முன்பு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி. ஜவகர் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

News April 25, 2024

கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை

image

ஈரோடு, பெருந்துறை தாலுக்கா உட்பட்ட சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கர்நாடக மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாளை நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளனர். அதேபோல பனியன் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடிய கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!