India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டிற்கு எதனால் ஈரோடு என பெயர் வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா. ஈரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஆர்த்ரா கபாலிஸ்வர் கோவிலே ஈரோட்டிற்கு ஈரோடு என பெயர் வரக் காரணம். ஆர்த்ரம் என்றால் ஈரம் என்றும், கபாலம் என்பது மண்டை ஓடு என்றும் பொருள். ஈரம் சொட்டும் ஓட்டை கையில் வைத்திருக்கும் கடவுளின் உடைய ஊரே ஈரோடு என பெயர் பெற்றது. SHARE பண்ணுங்க மக்களே
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 119 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக, மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில், 2,000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. அதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றப்பட்டு, ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அதிகாரிகள் கூறினார்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற +2 தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் தாய் அனுஷா, சரிவர சாப்பிடாமல், உடல்நல குறைவு ஏற்பட்டு, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 12ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
ஈரோடு பீடி தயாரிப்பு நிறுவனங்களுடன், கடந்த 14 தேதி முதல் 19 தேதி வரை போனஸ் வழங்குவது மற்றும் பொது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நடப்பு ஆண்டுக்கான போனஸாக, அனைத்து பீடி சுற்றும் தொழிலாளா்களுக்கும், அவா் சுற்றிய 1,000 பீடிகளுக்கு, ரூ.34 வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு மார்ச் 24 தேதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அடுத்த நசியனூர் – தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் நோக்கி சென்ற ஜான் என்பவரின் காரை மறித்து ரவுடி கும்பல் வெட்டியதில் ஜான் உயிரிழந்தார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோரை காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஈரோடு, பெருந்துறை அருகே பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்கியா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் ஜாமீன் பெற்று பெருந்துறையில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்த நிலையில், இன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்து கொண்டிருந்த போது ஜானை மர்ம நபர்கள் வெடிக்கொலை செய்தனர். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
நேற்று பாராளுமன்ற ரயில்வே விவாதம் கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு பாராளுமன்ற எம் பி கே இ பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். அதில் ஈரோடு ரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்க வேண்டும், ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அதிகரிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.