Erode

News April 28, 2024

ஈரோடு: நீீட் தேர்வு எழுதும் 4,700 பேர்

image

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொதுமருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்கப்பட்டது .

News April 28, 2024

ஈரோட்டில் ட்ரோன்களுக்கு தடை

image

ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் வான்வழி ஆளில்லா வாகனங்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

News April 28, 2024

ஈரோட்டில் இரட்டை சதம்

image

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்து வருவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 4 டன் எலுமிச்சை விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 1 டன் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ. 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News April 28, 2024

ஈரோடு: ஆன்லைன் மோசடி: இருவர் கைது

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீசார் பொது மக்களிடம் ஆன்லைன் டாஸ்க் கம்ப்ளீட் பிராடுகளில் ஈடுபட்டு வந்த நந்தகோபாலன் மற்றும் சாமிநாதன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர். அவர்களிடம் ரூ.6,72,600 பணம், சிம் கார்டு-8, ஏடிஎம் ஸ்வைப் மிஷின்-1 மொபைல்-7, செக் புக்-15, ஏடிஎம் கார்டு-19 போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

News April 27, 2024

ஈரோடு மாவட்ட மக்களுக்கு அலர்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலை அளவு, இந்தியா அளவில், 2வது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள், கோடை வெப்ப பாதிப்புகளை தடுக்க காலை, 11 மணி முதல் மாலை, 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், இளநீர், பழச்சாறு போன்றவை பருகலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

ஈரோடு பண்ணாரியம்மன் கோயில் சிறப்புகள்!

image

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்னும் ஊரில் ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்றி வனமாக இருக்கும் இப்பகுதியின் நடுவின் பெரிய அரண்மனை போன்று காட்சியளிக்கிறது இக்கோவில். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலின் வரலாறாக செவிவழிச் செய்தியாக கதைகள் கூறப்படுகின்றன. அழகிய கோபுரத்துடனும், அர்த்த, மகா, சோபன மண்டபத்துடன் இக்கோவில் உள்ளது.

News April 27, 2024

நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

image

கர்நாடகாவில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. எனவே கர்நாடக நாடாளுமன்ற தேர்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லையில், அந்தியூர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளில் 10 நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நேற்று முடிந்த நிலையில், நிலை கண்காணிப்பு குழுக்கள் இன்று, கலைக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 27, 2024

மரக்கடையில் பயங்கர தீ விபத்து

image

ஈரோடு பெரிய வலசு – கொங்குநகர் பகுதியில் பொன்னுசாமி (60) என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த தறிப்பட்டறை தொழிலாளர்கள், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். பின் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

News April 27, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ஈரோட்டில் நேற்று (ஏப்.26) 107.6 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

image

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் பயிற்சி சேர்க்கை முன்பதிவு வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 7338720704, 9698342166 என்ற எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!