India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் நேற்று (ஏப்.20) 108.68 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
ஈரோடு தொகுதியில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பெறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிசிடிவி காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குமாரப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான அறையின் சிசிடிவி டிஜிட்டல் திரையில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், கட்சிகள் அனைத்தும் பதிவாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரித்தனர்.
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், மே 8ஆம் தேதி முதல் மே.22 ஆம் தேதி வரை பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். எனவே விருப்பம் உள்ள நபர்கள் 0424-2400338, 8778323213 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் வார சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அவற்றில் ராசி வெற்றிலை ஒன்று இரண்டு ரூபாய்க்கும் பீடா வெற்றிலை ஒன்று 80 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டன. கோடை காலம் என்பதால் வெற்றிலை உற்பத்தி குறைந்ததால் வெற்றிலை விலை கடந்த வாரத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் சோதனை சாவடி அருகே கர்நாடகா மாநிலம் ராமாபுரம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து சோயா பீன்ஸ் ஏற்றி வந்த லாரி இன்று மதியம் எதிர்பாராத விதமாக 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார் படுகாயமடைந்த லாரி டிரைவர் அபிமன்னனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வெயில் கடந்த வாரத்தில் 109.4 டிகிரி கொளுத்தியது. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. இந்நிலையில், அம்மாபேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் வழியாக குருவரெட்டியூர் செல்லும் சாலை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோட்டில் நேற்று (ஏப்.28) 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி ஈரோடு மாவட்ட நீதித்துறையில் 79 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க <
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு சிசிடிவி கேமரா நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை இயங்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர் தொழில்நுட்ப கோளாறல் ஏற்பட்ட பிரச்சனை சரிசெய்யப்பட்டதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கார தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 80 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.