Erode

News May 2, 2024

ஈரோடு: ஒரே நாளில் 81 நிறுவனங்கள் மீது வழக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மே.1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News May 2, 2024

ஒரே நாளில் 81 நிறுவனங்கள் மீது வழக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மே 1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News May 2, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிஈரோட்டிற்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

ஹிட்லரின் வழியை பயன்படுத்தும் பிரதம் மோடி – முத்தரசன்

image

ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் பேசியிருக்கிறார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றுகிறார். மேலும் பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல என தெரிவித்தார்.

News May 2, 2024

அணையில் குளிக்க சென்றவர் பலி

image

சத்தியமங்கலம் மயடிபுதூரை சேர்ந்தவர் மகேந்திரன் (31). இவர் நேற்று மதியம் நண்பர்கள் 2 பேருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மகேந்திரன் ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் மூழ்கினார். பின் அருகில் இருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் மகேந்திரன் உடலை சடலமாக மீட்டனர். இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 1, 2024

ஈரோட்டில்: 110.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்

image

ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 1, 2024

310 பேர் நீட் தேர்வுக்கு தயார்

image

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 236 பேர் மற்றும் அரசு மாதிரி பள்ளியில் (எலைட்) பிரத்தியேகமாக நீட் தேர்வுக்கு பயின்ற 74 பேர் என மொத்தம் 310 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

News May 1, 2024

ஈரோடு: இளம்பெண் பலியான சோகம்

image

ஈரோடு, எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பவானி அடுத்த பெரியபுலியூர் பகுதியை சேர்ந்த கவிதா (30) என்பவரும் வேலை செய்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் கவிதா வேலை செய்தபோது, அவரது சேலை கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 1, 2024

அந்தியூர்: ரூ.16.50 லட்சம் மோசடி

image

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் மூலம் ராஜேஷ்குமார் (36) என்ற நபர் அறிமுகமானார். சென்னை தலைமைச் செயலகத்தில்
மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி, அங்கமுத்துவிடம் ரூ.16.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானார். அங்கமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

News May 1, 2024

ஈரோடு: மே 2ல் மாணவர் சேர்க்கை

image

ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து கட்டணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9487247205, 0424-2294365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!