India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் அதிகமான வெப்பம் பதிவானது. இந்நிலையில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி,மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1/2 மணி நேரம் பெய்ய மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அம்மாபேட்டை காவிரி கரையில் மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோயிலில் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி இன்று சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் ரிஷப வாகனத்தில் சுவாமி கோவில் உலா வந்தது.
சத்தியமங்கலம் அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. அங்கு காவல் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி அமைந்துள்ளது. நேற்றைய தினம் லேசான சாரல் மழை பெய்ததால் சோதனைச்சாவடி அடுத்த காட்டுப்பகுதியில் வன விலங்குகள் மகிழ்ச்சியுடன் படுத்து புரளும் காட்சி காண்போரை உற்சாகப்படுத்தியது.
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று, நாளை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி மே.7 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் – பவானி சாலை, கல்பாவி பிரிவு பகுதியில் ரேசன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வாகன அங்கு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த உதயகுமார் (55) என்பவரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சி கோட்டக்கூட்டுக் குடிநீர் திட்டம் எடுக்கும் இடமான வரதநல்லூர் பகுதியில் போதிய அளவு குடிநீர் உள்ளது .குடிநீர் தேக்கத்தில் தினமும் ஒரு கோடி லிட்டர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாநகராட்சி மூலம் 80 லட்சம் லிட்டர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மூன்று மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர், திங்களூர் ,கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் இந்த மின்தடையால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிபட்டு வருகின்றனர். இதையடுத்து துண்டிக்கப்பட்ட மின்கம்பியை விரைந்து சீர்செய்து மின்சாரம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் ஈரோடு மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மே 1ஆம் தேதி 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் மே 2இல் அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், நேற்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இன்று அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.