Erode

News May 10, 2024

ஈரோடு 7ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.37% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.25 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.23 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 7ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

ஈரோடு மாவட்டத்தில் 95.08 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 95.08 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.10 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.06 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

பெண்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

image

கொல்லம்பாளையம் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கான ஆரி எம்பிராய்டரி தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு வரும் மே.20 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள்  0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

அம்மனிடம் மழை வேண்டி வழிபாடு

image

பெருந்துறை அருகே காஞ்சி கோவில் அன்னை சத்யா நகர் கிராமத்தில் பங்காரு அடிகளார் அவர்களுக்கு புகழேந்தல் மற்றும் தொண்டரின் அஞ்சலி விழா நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நலம் வேண்டி, மழை வேண்டி மற்றும் இயற்கை நலனுக்காக வழிபாடு, வேள்வி மற்றும் அன்னம் இடுதல் நிகழ்வும் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர்.

News May 9, 2024

ஈரோட்டில் உயர்மட்ட குழு கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் மணீஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் உள்பட அனைத்து துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

News May 9, 2024

ஈரோட்டில் வெயில் குறித்த மீம்ஸ்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக 105 முதல் 111 டிகிரி பாரன் ஷூட் வரை வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதானால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடும் வெயிலால், ஈரோடு பற்றிய பல்வேறு நகைச்சுவையான மீம்ஸ்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

News May 9, 2024

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் புன்னம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன் (46) நேற்று மாலை அவரது கிணற்று தோட்டத்தில் மின்மோட்டார் எடுத்துவிட சென்ற போது கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி செந்தில்வேலன் உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 9, 2024

இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்

News May 8, 2024

பஸ் நிறுத்துமிடத்தில் வெயில் பாதுகாப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்துமிடத்தில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக பந்தல் அமைத்து உள்ளனர். இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!