Erode

News May 13, 2024

பலத்த காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்

image

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அதில் அந்தியூர் காட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. வாழைத்தார் விட்டு அறுவடைக்கு தயாராகி வந்த மரங்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்பை முழுமையாக கணக்கிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 13, 2024

ஈரோடு: பெண் யானை உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் கடந்த 9ம் தேதி அந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சோர்வடைந்த நிலையில் படுத்து கிடந்தது. வனத்துறையினர் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.

News May 13, 2024

ஈரோடு : மண் பானை விற்பனை அதிகரிப்பு

image

ஈரோட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர்சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஈரோடு – கொல்லம்பாளையத்தில் குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட்… தட்டி தூக்கிய போலீஸ்

image

ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் உள்ள ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக நேற்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த கடையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

News May 12, 2024

மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்

image

கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அடன்படி ஈரோடு மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.

News May 12, 2024

ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட்

image

ஈரோடு மாவட்டம் மாதவகிருஷ்ணா வீதியில் 45 ஆண்டுகளாக இயங்கி வரும் பஹதூர் என்பவரது இனிப்பு கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் பஹதூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 12, 2024

ரூ.50,000 மதிப்புள்ள கஞ்சா கடத்திய 3 பேர் கைது

image

பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.50,000 மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.இதையடுத்து கஞ்சா கடத்திய மதிவாணன் (40), சிவசக்தி (22), லோகநாதன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 11, 2024

ஈரோடு மழைப்பொழிவு விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அம்மாபேட்டையில் 5 செ.மீட்டரும், வறட்டுப்பள்ளத்தில் 2 செ.மீட்டரும், எலந்தக்குட்டைமேடு பகுதியில் 1 செ.மீட்டரும் மழை அளவு பதிவானது. சமீபத்தில் தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

ஈரோடு: வேன் கவிழ்ந்து விபத்து

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 9- வது கொண்டை ஊசி வளைவில் மினி டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேனில் பயணம் செய்த 15 க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 11, 2024

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

error: Content is protected !!