Erode

News May 14, 2024

பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி

image

ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது வருகின்ற 20 ஆம் தேதி முதல் துவங்கி ஜூன் மாதம் 24ஆம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட கிரிக்கெட் போட்டிக்கு 14 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு மே 19 காலை 7மணிக்கு ஈரோடு எஸ்.எஸ்.அகாடமி பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. 1.9.2010 தேதிக்கு பின்பு பிறந்தவர்கள் வயது சான்றிதழ், வெள்ளை சீருடை, காலணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும் என ஈரோடு மாவட்ட செயலாளர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 14, 2024

ஈரோடு: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 92.86% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.68 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.32 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

தமிழகத்தில் 2ஆம் இடம் பிடித்த ஈரோடு

image

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 10,729 மாணவர்களும், 12,060 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், மொத்தம் 21,777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.86% தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 97.07% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் 95.56% தேர்ச்சி பெற்று 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

ஈரோடு : வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணப்பட உள்ளது. இந்நிலையில், அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

News May 13, 2024

ஈரோடு : நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு

image

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கும் நாய்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாய்களை வளர்ப்பவர்கள் உரிய உரிமம் பெற வேண்டும். நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதற்கான பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

image

அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி 2 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு  https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் வருகின்ற 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். பழங்குடி மற்றும் பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

News May 13, 2024

ஈரோடு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

ஈரோடு மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி 

image

கோபி ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானுப்பிரியா. இவர் தனது மகனுடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் கோபி ஜீவா செட் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் பானுப்பிரியாவும், ஜெஸ்வினும் படுகாயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பானுப்பிரியா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!